கவிதைகள்
சாரங்கா தயாநந்தன்

ரோமங்களின் கதை
என்மனத்தின் ஆசைகள்
ரோமங்களாய்….
பிள்ளைப்பராயத்தில் அவை
பொன்னிறமாய்த் துலங்கின.
மனோரம்யமிக்க அவற்றின்
மயிர்க்கால்கள்
அன்னைமடித் தூக்கத்திலும்
அன்றலர்ந்த மல்லிகை காவி
குதி தொடும் கூந்தலிலும்
இளந்தென்றல் வருடுமோர்
இனிய பொழுதின் ஊஞ்சலிலும்
ஆரம்பங் கொண்டிருந்தன.
பருவ வயது தொடக்கமுற்றதும்
இருள் விலகியிருக்காததுமான
ஒரு அதிகாலைப் பொழுதில்
எனது ‘பால் ‘ விலகிய
தொடுகைக்கான பிடிப்பை
உணர்ந்த போது
கரிய நிற ரோமம்
ஒன்றின் தோற்றத்தினை
மனதோரங் கண்டேன் நான்.
ஆயினும்….
என் முதிர்கன்னிமையை
வெறிச் சிரிப்போடு
காலம் கடக்கின்ற
இந் நிகழ் காலத்தின்
ஒற்றை இறகான
நேற்றில் அதிர்ந்தேன்.
பொன்னிற ரோமங்கள்
எதுவும் அங்கில்லை.
மனதின் உடல் முழுதும்
விரவியிருந்தன
கரிய நிற ரோமங்கள்.
ஒரு மிருகத்தினது போல….
குழந்தையின் அழுகை
அழுகையில் மனசு கரைகிறது.
பூமுகம் குழம்பி
விழிகள் சிவந்து தளம்பும்
குழந்தையின் அழுகை
கொஞ்சமும்
சகிப்பிற்குரியதல்ல.
கன்னங்களில் வழிகிற
கண்ணிரின்
கோடிடும் எத்தனிப்பை
தன் புறங்கைத் தேய்ப்பில்
தோற்கடிக்கிறது குழந்தை.
கண்ணீரானது தேம்பியபடி
பார்ப்போர் மனதில் ஒட்ட.
பின்னர்
அழுகைக்குச் சக்தியற்று
அதை விசும்பலாக
மாற்றுகிறது குழந்தை.
விசும்பலின் களைப்பில்
கேவலுக்குத் தாவுகிறது.
சிறிது பொழுதிற்கப்பால்
மெளனத்தை
அழுகையின் சத்தக்குறைப்பாக
அர்த்தங் கொண்டபடிக்கு
மழை மந்தாரக் கவிவை
பிஞ்சுமுகத்தில் தேக்கியபடி
வெற்றுத் தரை பார்த்து
உட்கார்ந்திருக்கிறது.
இப்போதும் கூட
ஊட்டம் மிக்க
உணவுக் கோப்பையுடன்
எட்டிப் பார்க்கிற
தாயின் முகத்தில்
உணவுண்ண விரும்பாத தன்
பிடிவாதத்தை வீசியடிக்கிறது .
—-
nanthasaranga@gmail.com
சாரங்கா தயாநந்தன்
- வரி விளம்பரம்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-13) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ராகு கேது ரங்கசாமி – 2
- நேற்றின் மாடல் குல மாணிக்கங்கள்
- அந்த நான்கு பேருக்கும் நன்றி!
- ஈ.வே.ரா. சிறியார் அல்ல
- (புதிய) விதியை ஏற்பதா ? (2) கிறிக்கற்
- பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM)
- குழந்தைத் திருமணமும், வைதீகமும்
- புலம் பெயர் வாழ்வு (5) – கென்டயினர் பயணம்
- தற்காலத் தமிழ்ப்பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் சில பதிவுகள்
- சுடாக்கு
- கீதாஞ்சலி (65) என்விழி மூலம் உன் படைப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் –81 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 13
- வெள்ளிக்கிழமை யூலை மாதம் (2002-07-12)
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.
- Alzhemier- மறதி நோய்-1
- கவிதைகள்
- வலியின் மொழி
- யாருக்காக அறிவியல் ?
- நார்னியா, ஹாரி பாட்டர், மேட்ரிக்ஸ் – கிருஸ்துவ அடிப்படைவாதம், ஹிந்து மதம் மற்றும் புதுயுக நம்பிக்கைகள்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -2 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- பெண்ணுடலை எழுதுதல்
- தி கிங் மேக்கர் : திரைப்படம்
- வெகுஜன இஸ்லாம் (Popular Islam)
- “மங்கலான கதைச் சொல்லல்கள்” (எம்.ஜி . சுரேஷின் “37”)
- எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
- சேரனிடம் யார் சொன்னார்கள் ?
- சாதனைகள் பலதைத் தனதாக்கிக் கொண்ட சைவமங்கையாின் நவரச மேளா
- பாரதி தரிசனம்
- விளக்கி, விளக்கித் தேய்ந்தன விரல்கள்
- நவீன கலை இலக்கிய பரிமாற்றம்
- அரைகுறை நிஜங்களின் ஊர்வலம்
- காப்பாற்றப்படட்டும் மதச்சார்பின்மை : மடிந்தழியட்டும் காஃபீர்கள்
- கடிதம் (ஆங்கிலம்)
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
- தமிழ் மையம் – மோஸார்ட் இந்தியாவைச் சந்திக்கிறார்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில்
- சண்டக்கோழி – செயல் துண்டுதலும், சமரசமும்
- லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி