கவிதைகள்
சேவியர்

கலைதல்
ஃ
காலையில்
அங்கே இருந்த நிழல்
மாலையில்
அங்கே இல்லை.
காலையில்
மெளனமாய் நின்றிருந்த
காற்று
இப்போது
அவ்விடத்தில் இல்லை.
அப்போது பார்த்த
ஓரிரு பல்லிகளை
இப்போது
காணவில்லை
காலையில்
வீட்டுக்குள் கிடந்த
நான்கைந்து துண்டு
வெயில்கள் கூட
வெளியேறியிருக்கின்றன.
ஆனாலும்
கதவு திறந்து நுழைகையில்
நினைத்துக் கொள்கிறோம்
எல்லாம்
அப்படியே இருக்கின்றன.
ஃ
இரகசியம்
ஃ
உன்னிடம்
இரகசியங்கள்
இல்லையென்றே கருதியிருந்தேன்
அக்கணம் வரை.
நீ
சொல்லியவை எல்லாமே
இரகசியங்கள்
என்றும்
பிரசுரிக்கத் தகுதியற்றவை என்றும்
அக்கணம் தான்
எனக்கு அறிவித்தது.
இரகசியங்கள்
இரசிப்பதற்கானவை அல்ல
அவை
குருதி தோய்ந்த
வலிகள் என்பதையும்
அக்கணமே தெரிவித்தது எனக்கு.
இனிமேல்
என்னிடம் சொல்ல
உனக்கு
இரகசியங்கள் இருக்கப் போவதில்லை.
நானே
உனக்கு ஓர்
இரகசியமாகி விட்ட பிறகு.
ஃ
அப்பாவே தான்
ஃ
அப்பா தான்
எல்லாம் கற்றுத் தந்தார்.
எல்லாம்.
மரண வீடுகளில்
ஒலிக்கும்
ஒப்பாரியை விட
மிக மிக நீளமானது
அதைத் தொடர்ந்து நிலவும்
மெளனம்,
என்பது உட்பட.
ஃ
புதிதென்று ஏதுமில்லை
ஃ
‘இன்று என்ன புதிதாய் ? ‘
என்று
ஆரம்பித்தே பழகி விட்டாய்.
பழையவற்றை
அசைபோட யாருக்கும்
நேரமிருப்பதில்லை.
தேவையானதெல்லாம்
புதியவை மட்டுமே.
அந்தப் புதியவற்றின்
வால் பிடித்துக்
கீழிறங்கினால்
பழைய படிக்கட்டுகள்
இடறுகின்றன.
எப்போதோ
புதியதாய் விசாரிக்கப்பட்ட
பழையவை.
எழுதி முடித்ததும்
பழையதாய்ப் போய்விடும்
இந்த
கவிதை உட்பட
எதுவுமில்லை என்னிடம்
புதியதாய்.
ஃ
நானில்லாத பொழுதுகள்
ஃ
பின்னாலிருந்து
கண்ணைப் பொத்திச் சிரிக்கிறது
உன் பிரியம்.
உன் பெயரைச் சொல்ல
எனக்குச்
சங்கடம் நேர்வதில்லை
எப்போதும்.
என் கண்ணைப் பொத்தும்
உரிமை
உனக்கே உரியது
என்பதால் மட்டுமல்ல.
உன்
பெயரை உரக்கச் சொல்லும்
வாய்ப்பு
அவ்வப்போது தான்
வாய்க்கிறது
என்பதற்காகவும் தான்.
ஃ
Xavier.Dasaian@in.eFunds.com
ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்
- கறுப்புப் பூனை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7
- மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே!
- சொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)
- காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்
- பாலம்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்
- உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை
- மீள் வாசிப்பில் சூபிசம்
- எடின்பரோ குறிப்புகள்-8
- மோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )
- மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்
- சிரிப்பு
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1
- இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்
- ஊடகங்களில் சில கரும்புள்ளிகள்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1
- பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- மீண்டும் மரணம் மீதான பயம்
- எதுவுமில்லாத போது
- இளமையா முதுமையா
- புனித உறவுகள்
- சிரிப்பு
- கற்பு என்றால் என்ன ?
- செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]
- அணுவும் ஆன்மீகமும்
- இன்று சொல்லிச் சென்றது
- கவிதையில் வடிகட்டிய உண்மை
- அந்த பொசங்களின் வாழ்வு….
- மஸ்ஸர்ரியலிசம்:புதிய புரிதலுக்காக
- நான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.
- விளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்
- உறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்
- சிவா ! ராமா ! – 2060
- ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை
- ‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்
- மலர்களும் முட்களும்
- K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை
- கடிதம்
- திருவள்ளுவர் கல்வி நிலையம்
- கடிதம் – ஆங்கிலம்
- சமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)
- எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ?
- டொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு
- இனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி
- கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )