சகுனம்
சாரங்கா தயாநந்தன்

அழகிய விடிகாலையொன்றில்
விழித்து வாயில் திறக்க
நின்றிருந்தது கறுப்புப் பூனை.
நிறக்கலப்புப் பாவனைக்காய்
மட்டும்
முகத்தில் இரண்டு
பச்சைக் கண்மணிகள்
பதித்து.
உறுத்துப் பார்த்தது.
ஏதோ என்னில் தான்
விழித்தது போல.
விசனமுறும் மனம் எனது.
‘பார்த்துப் போகச் ‘ சொல்கின்ற
தாயின் வார்த்தைகள் ரீங்காரிப்பதும்
கறுத்த பூனையினாலாகும்
துர்ச்சகுனம் பற்றிய
பாட்டி வழிக் கதைகளுக்கு
பழக்கமானதுமான
என் காதுகளைச் சுமந்த
அன்றைய பயணம்
நிம்மதி தொலைத்தது.
அவ்விதமான பயணங்களும்
காலைச் சகுனங்களும்
முடிவுற்ற
ஒரு அழகான அந்தியில்
வீடு வந்தேன்.
வீட்டின் முன்பதாகுமோர்
குறுக்குத் தெருவில்
கழுத்தில் தெறித்த
குருதிக்கோட்டுடன்
கிடந்தது கறுப்புப் பூனை
தன் மென்பச்சை விழிகளை
நிரந்தரமாய் மூடி.
—-
nanthasaranga@gmail.com
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4
- தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் ?
- எதிர் குலக் கல்வி எனும் சிந்தனையின் அடியொற்றி…
- பாக்கி
- கதை
- சி.என்.ஜி
- முரண்பாடுகளின் அறுவடை
- வகாபிசமும் நவீன முதலாளியமும்
- ஹிந்து சமூகப் பிளவும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவமும்
- கீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- வார்த்தை
- வாக்களிக்கப்பட்ட பூமி ஸிண்ட்ரோம்-2 (Promised Land Syndrome- 2) வாக்களிக்கப்பட்ட பூமி: ஆப்பிரிக்க கண்டம்
- எடின்பரோ குறிப்புகள் – 6
- ‘தமிழ் பாதுகாப்புக்குழு ‘ ஒரு கண்ணோட்டம்
- மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்
- இயற்கையும்,விடுதலையும்…
- பெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- வளர்ச்சி
- விடியலை நேரம் உணர்த்தினாலும் ….
- ஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமி மீட்சி வசதிகள் -2
- திறந்திடு சீஸேம்! / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்
- வ.ந.கிரிதரன் கவிதைகள்!
- பொங்கல் வாழ்த்துக்கள்
- ஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்
- சகுனம்
- பிரதாபசந்திர விலாசம் -2
- ஆகாயப் பந்தலிலே
- கடிதம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம்.
- பிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)
- கற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘
- நம்பி வந்த வழியில் சேக்கிழார்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)