இறைவா நீ இறந்துவிட்டால் ?

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

கவிஞர் புகாரி


நீ என்பதும் வேறோ இறைவா
நான் உனக்குள் இருப்பு
நான் என்பதும் வேறோ இறைவா
நீ எனக்குள் இருப்பு

உனக்கு என்னைத் தருவதென்பது
உனக்கு உன்னைத் தருவது
எனக்கு நீயும் அருள்வதென்பதும்
உனக்கு நீயே அருள்வது

நானே காணும் சுகங்கள்
அது நீ காணும் சுகங்கள்
நானே எண்ணும் எண்ணம்
அது நீ எண்ணும் எண்ணம்

நான் இறந்தேன் என்றால்
அது யார் இறந்தார் இறைவா
நான் இறந்தேன் என்றால்
அது நீ இறந்தாய் அன்றோ

நான் இறந்தேன் என்றால்
அது நீ இறந்தாய் இல்லை
ஏன் என்கிறேன் வியந்து
ஓ… நீ பிளந்தாய் உண்மை

உன்னைத் தந்தாய் எனக்கு
ஒரு செல்லைக் கிள்ளி உயிராய்
உன்றன் பூரண இருப்பில்
சிறு துகளின் மாற்றம் மரணம்

மரணம் என்னை அழித்தும்
ஒரு துளியும் அழிந்தாய் இல்லை
உருவில் புதினம் கண்டாய்
என் உயிரைப் பிரிதாய்க் கொண்டாய்

உனக்கு அழிவே இல்லை
எனில் எனக்கும் அழிவே இல்லை
மரணம் என்பது மாற்றம்
அட மாற்றம் என்பதே இறைவன்

buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி