எச்சம்!
ப.வி.ஸ்ரீரங்கன்
பனியுதைக்கும் அதிர்வில்
விறைத்தொதுங்கிய உணர்வும்
இளமைக்கு விடைகொடுக்கும் உடலும்,
இழப்பினது கனவுகளுமாக
இந்தக் குளிர் காலம்.
சற்று முன்
நிலாவின் ஒளியை
நுகர்ந்த என் மனது மெளனித்துக் கிடக்கிறது!
மாலை நேரத்துப் பொலிவுகளை
சிறார்களின் துள்ளலிலும்,
சிரித்தொதுங்கும் ‘அம்மாக்களின் ‘
விழித்துடிப்பிலும் சுவைப்பது ஒரு நிலை!
இந்தக் குளிர் சுமக்கும் பொழுதுகளுக்கு
எந்தப் பொலிவுமில்லை!
இது
கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில்
மெளனித்த காலத்தின் அதிருப்தியாய்
மனதைக் கிளறிவிடும்
கார்த்திகையில் விளக்கிட்டு
தேவாரம் பாடிய மனதும்,
வாழைமரத்தண்டில் சிரட்டை வைத்துக் கொளுத்திய
எனது தீபமும்
நெடுநாளாய்த் தீந்த பொழுதுகளில் தனித்திருக்கு.
அந்த மனதின்
நினைவுத் தோப்பில்
தீராத வடுவாய்
நெருஞ்சியாய் குத்தும் முதிய பருவம்.
தரையில்பட்டுத் தெறிக்கும் உயிரும்
பேசவெழுந்த நாவின் முனகலும்
குருதியின் அதிர்வில்
நிலைமறுத்திருக்கு
என் தேசத்து முற்றத்தில்.
இருண்டவெளியின்
நெடும்பாதையில்
தேசத்தை நோக்கிய
நெஞ்சு
வனப்பிழந்து கிடக்க,
பார்த்துப் பழகிய பூமியும்
பாய்விரித்தப் படுத்த முற்றமும்
பாட்டுச் சொன்ன குயிலும்,
பக்குவமாய் கட்டிய வீடும்
பால் குற்றிய ஆலமரமும் தொலைத்து
சிலநொடியில்
முளையெறிந்த ‘தேசக் கனா ‘
என்னைப்
பரதேசம் அனுப்பியது ஒரு காலம்.
இன்றோ
விழித்திருக்கையில் மரணமும்
தூக்கத்தில்
ஆத்தையும்,அடுப்படியும்
பிடரிக்குள் வருகின்றன.
உடல்வியர்க்கும்
சூடான வானத்தையும்
சுகமாய்த் திரியும் மெல்லிய தென்றலையும்,
மேனியெங்கும் பட்டுவிலகும் வண்டுகளையும்
கால்வலிக்கத் துணைவந்த
தோழமையையும்-
தோளில் தொங்கிய துணிப்பையையும்
எங்கோ தொலைத்துவிட்டேன்!
–ஈ-ஈ–@
எவருமறியா
இந்தப் பொழுதுகளின்
‘எச்சில் இரவுகள் ‘
எதற்கெடுத்தாலும் வெருட்டிக் கொண்டிருக்கு.
குளிர் ஒரு புறமும்,
புறத்தியான் என்பதாய்ப்
புகல் தேசமும்
பால்யப் பருவத்து
மார்கழித் ‘திருவெம்பாவை ‘யையும்
திருநீற்று நெற்றியையும்
சங்கின் ஒலியையும்
உணர்வின் ஒரு மூலையுள் துரத்துகிறது.
ஆத்தைபிடித்து புதிய அடுப்பும்
அப்பன் சூடடித்த சிவப்பரிசியும்
தையில் பொங்க,
அண்ணன் சுட்ட வெடிகளும்,
பூந்திரிகளில்
பூத்த எங்கள் மனமும்( பன்மையொழிந்த ஒருமை 😉 .)
அன்றைக்குத் ‘தம்பி ‘,தங்கை,
அக்கா,அண்ணன் உறவிருந்த தடயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கு!
ஸ்ரீஸ்ரீஸ்ரீ~
கனவு வாழ்வு
குருதியுறையும்
குளிர் பொழுதில்
தொண்டைக் குழியில்
சிக்கித் தவிக்கும் போசனத்து எச்சமாக…
ப@
:-0
ப.வி.ஸ்ரீரங்கன்
22.11.2005
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)
- கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்
- பழமொழியும் பாட்டியும் அம்மாவும்
- இதே கார்த்திகை
- எச்சம்!
- வயதென்ன ?
- உருமாறும் உறவுகள்
- மழை
- கற்பும், கருத்துச்சுதந்திரமும்
- தியா: முஸ்லிம் மடோனா
- போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 2
- மனித வதை!
- நந்தன் இல்லாமல் நடராஜரா ?
- ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி இந்திய ஜனாதிபதி ஆற்றிய உரை
- அந்த மலர்க் கூட்டம்
- இது எங்கள் கதை
- சான்றுகள்
- கீதாஞ்சலி (50) எனது இறுதிக் கானம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கண்ணாடிகள்
- பெரியபுராணம் – 66 – 31. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
- உலகமயமாதல் சூழ்நிலையில் இந்திய/தமிழ் கலை(!) படைப்பாளிகளின் கவனத்திற்கு சில!
- கடிதம் – சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு
- மெல்பேர்ன் தமிழ்ச் சங்கம் – சர்வதேச தமிழ் குறும்பட விழா
- வட்டமேசை
- சோமு தங்கச்சியும் குஷ்புவும்
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VII
- தமிழ்க் கவிதையில் பாலியல் இருப்பின் குரல்
- இலக்கியத்தில் பெண்கள்
- பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – எமே செசேர் (Aime Cesaire)
- புனைவுகளும்,இறையியற் றன்மைகளும்!
- நாடோடி மனம் – பிரம்மராஜன்
- நீரில் மூழ்கிய நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேரும் நெடுநாட் துயர்கள் (3) (New Orleans Aftermath Blues After Katrina Attack)
- கடிதம்