கவிதை
வ ஐ ச ஜெயபாலன்
பயிரோ மழைக்கேங்கும்
பாலையோ நதியிடம் யாசிக்கும்
ஏழையின் காவியங்கள்
உயிர்த்திட உன்னிடம் கையேந்தும்
உயிரினில் இனித்திடவும்
உருக்கிடும் துயரெலாம் கருகிடவும்
யாழினை எடுத்தேனடா கண்ணா இனி
நதியென பெருகட்டும் கவிதை என்றாய்
என் வாழ்க்கையின் தவப்பயனே சொன்ன
மந்திர வார்தைகள் மறந்தனையோ.
வானுக்குள் மதிபோல அந்த
மதியினுள் சுடரும் செங்கதிர்போல
உன் யாழுக்குள் தேன்போல என்
ஊனுக்குள் உயிரானாய்
உள்ளத்துள் ஒளிர்கின்ற கவியானாய்
வீணுக்குள் தள்ளுவையோ என்னை
விளக்கென தூண்டி நீ அருளுவையோ
—-
visjayapalan@yahoo.com
- வித்யாசாகரின் ரசிகை
- நாலு வயது
- அப்பா (உள்ளது உள்ளபடி)
- அலறியின் மூன்று கவிதைகள்
- ரோஜாப் பூக்கள்
- சிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்
- வள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்!
- தவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல்
- கஜினி திரைப்படம்- எழுத்தாளர்களுக்குச் சொல்வது….
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-12)
- பாறையின் இதழ்கள்
- பெரியபுராணம் – 60 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- காட்சி மாற்றங்கள்
- கடிதம்
- கடிதம்
- கவிஞர் புகாரியின் இருநூல்களின் இனிய வெளியீட்டு விழா
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்புப் பேரவை,சென்னை
- விமர்சனக் குரல்களின் உலகம் (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத்தொகுதி அறிமுகம்)
- நிர்மூலமாக்கிய ஹரிக்கேனால் நியூ ஆர்லியன்ஸ் நகர மாந்தர் வெளியேற்றம் [2] (Mass Exodus in New Orleans City After Hurricane Katrina
- கவிதை
- உயிர் வாழ்தல் என்பது
- கீதாஞ்சலி (44) எப்போதும் வருகிறானே! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )