நலம்பெறவேண்டும்
வ.ஐ.ச.ஜெயபாலன்
வாழிய நீடு,
உன் மனம்போல உன் உடலும்
வல்லமை ஒளிபெறுக.
மண்ணில் நசிந்த புல்லுக்கும்
கசிந்துருகும் உனக்காக
என்றுமென் கவிதை.
அமாவசை இருளில் நீலாதேடி
கூரையில் ஏறிய சிறுபெண்
இன்னும் உன்னுள் தேடலுடன்.
உன் கனவுகட்கும் கற்பனைக்கும்
உன் சிருஸ்ட்டி மனசின் சில்லான விந்தைகட்கும்
ஒருகுறையும் நேரற்க்க.
புலம்பெயர்ந்த நம்மவர்க்கு
மனசு கற்பகதரு.
கனவுகள் காமதேனு.
நல்ல நினைவுகளன்றோ
நம் இருப்பின் அமுத நதி.
சுமை மறந்து பாடி
சும்மா நடக்கின்ற
கிரமத்துப் பெண்களது
தவம் உனக்கும் கைவருக.
விரைந்து பருகு,
மண்னும் விண்ணும் காற்றும் நீரும் சேர்த்து
தீயில் சுட்டு குயவன் தந்த
ஒன்பது உடைசல் கிண்ணத்தில்
மனித வாழ்வின் மது.
விரைந்து பருகு.
இன்றை நாளையின் குப்பைத் தொட்டியுள்
விதி எறிய முன்னம்.
மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில்
இக்கணம் இன்னும் எம்மிடம் உள்ளது.
பிறகு பிறகு என்பவர்கள்
புதைந்து குழியே இவ் உலகு.
இதோ என்று எழுந்தவர்கள்
இசைக்கும் கவிதை இவ் வாழ்வு.
புடத் தீயை பொன் விலங்கு
பிணிக்கும் என்று அஞ்சினையோ.
கவிதையான சிறு பெண்ணே
காலம் உன்னை விடுவிக்கும்
—-
V.I.S.Jayapalan (Poet)
Raadyr Veien 3B – leil. 36
0595 Oslo, NORWAY.
Tel/Fax: 00 47 22 162235
Sri Lanka: 00 94 777 560 759
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-10)
- மூன்று மணித்துளிகள் – பேரண்டத் துவக்கம்
- நலம்பெறவேண்டும்
- கீதாஞ்சலி (42) முடிவில்லா முக்தி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 58 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கவிதைகள்
- ‘ ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘
- கற்பு என்னும் மாயை
- கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்
- Commander in Chief
- பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு
- சேவை
- தெரிந்தவன்
- ஏதேன் தோட்டமும் கேலாங் விடுதியும்
- அலைகள் திமிங்கிலம்
- ஒற்றை நட்சத்திரம்
- கவிஞர் எஸ் வைதீஸ்வரனின் 70-வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் – 2-10-2005
- அவசரமாய், அவசியமாய் ஒரு வேண்டுகோள்
- காலம்-25 : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்
- சுயாதீன கலை திரைப்பட மையம் -முடிவுகள்
- ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘(This Side Up)
- கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் . . .
- கிடைக்க மறுக்கிற நீதி (ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்)
- சின்ன வீடு
- குறும்பட வெளியீட்டு விழா
- திறந்த ஜன்னல் வழியே
- 24 வது ஐரோப்பிய தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 – லண்டனில் 15,16 ஒக்டோபர் 2005