கூ ற ா த து கூ ற ல்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


கவிதைப் பம்பரம்

—-
பீத்தல் குடையும்
பிய்ந்த செருப்புமாய்க்
கிளம்பி விட்டார்
கணக்கு வாத்தியார்
டியூஷன் எடுக்க

எந்தக் கணக்குக்கும்
கட்டுப்படாமல்
பெருமழையாய்ப்
பெருகுகிறது
வாழ்க்கை


ரயில்பாதை
அகல ரயில்பாதை

தொலைபேசி
செல்

பக்கத்து வீட்டுக்காரனோடு
பேச்சுவார்த்தை இல்லை


துாரத்துப் பள்ளி
செருப்புகள் இல்லை
புழுதியிறைக்கும் வெளியூர் பஸ்
டாட்டா காட்டிச்
சிரிக்கும் சிறுமி


அரசமரம்
பிரம்மச்சாரிக்கு தவவலிமையாம்
ஸ்திரீகளுக்குப் பிரசவ வலி


துாக்கிச் செல்ல நால்வர்
பிறக்க இருவர்
வாழ
ஒருவனே


பூக்கள் பெருமூச்சு விட்டன
ஆகா என்றான் பறிக்கிறவன்


விழித்துக் கொண்டிருப்பதாய்க்
கனவு கண்டேன்
விழித்துப் பார்த்தபோது
உறங்கிக் கொண்டிருந்தேன்


இலை என்றால் தடவிச் செல்கிறாய்
சருகென்றால் துாக்கிக் கொள்கிறாய்


பெருமாள் பக்தன்
நெற்றியைக் காட்ட
மல்லாக்கப் படுத்தது
கோவில் யானை


மன்னனின் ஆட்சி
மகோன்னத ஆட்சி
குடிகளுக்கெல்லாம்
குறையே இல்லை

பாரென் கவிதை
பரிசுகள் தருவாய்
பட்டினி நான்
பத்து நாளாய்


சேதுவை மேடுறுத்தி
வீதி சமைக்கிறவர்கள்
வீதியிலேயே சமைக்கிறார்கள்


அமாவாசை நிலவைக் காணோம்
டார்ச் அடித்துத் தேடும் தம்பி

வானத்து நிலவை
பூமியில் பாரு
சந்தேகம் இருந்தால்
தேடிப் பாரு


மேலும் சில சின்னப் பொறிகள் அடுத்த இதழில்
storysankar@rediffmail.com
கூறாதது கூறல் – கவிதைப் பம்பரம்
வெளியீடு – இருவாட்சி சென்னை 600 011

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்