தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

தமிழில்: சிபிச்செல்வன்


பகையில் ஆரம்பம்
மனித இயல்பு இவையெல்லாம்
நீ உட்கார்ந்தால், அவர்கள் சொல்வார்கள் – “உட்காரக் கூடாது”.
நீ நின்றால், “எதற்காக நிற்கிறாய், நட!”
நீ நடந்தால், “இது உனக்கு அவமானம், உட்கார்!”
ஒருவேளை நீ படுத்திருந்தால், அவர்கள் கவலைப்பட்டுக் கூறுவார்கள் – “எழுந்திரு”
கொஞ்சம் ஓய்வின்றி நீ படுக்கைவில்லையென்றால், “கொஞ்சம் படுத்துக்கொள்”.
எழுந்தும், அமர்ந்தும், என் நாட்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன
இப்பொழுது நான் இறந்தால், அவர்கள் சொல்வார்கள் – “வாழு”
நான் வாழ்ந்தால், இப்படியும் அவர்கள் கூறுவார்கள் – “அவமானம் சாவு”
இப்பேரச்சத்திலேயே நான் மெளனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
சக்கரம்
அவர்கள் சிவப்பு ஆடைகளை அவளுக்குக் கொடுத்தார்கள்
ஏனெனில் சிவப்புதான் கண்ணைப் பறிக்கும் நிறம்,
அவளின் கழுத்தில் தொண்டையில் நெக்லஸ் போட்டிருக்கிறார்கள், கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ் நாயின்
கழுத்தில் போடப்படும் வார்ப்பட்டையைப்போல இருந்தது.
அதை விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் அணிந்துகொள்கிறார்கள்.
அவளின் காதுகளும், மூக்கும் கூர்மையானவை.
காதிலும், மூக்கிலும் அணிகலன்களைப் போட்டிருக்கிறார்கள்;
ஏனெனில் அவளே சிறிது ஒளிர்கிறாள், அணிகலன்கள் வரை வைடூர்யங்களாலும் இன்னும் ஒளிர்கிறாள்
அவளுடைய மெருகு கூடுதலாகிறது.
அவளுடைய கரங்களுக்கு வளையல் போட்டிருக்கிறார்கள்
அவை விலங்கின் வடிவத்திலமைந்து கைகளை அசைக்க முடியாமல் செய்கின்றன
கணுக்கால்களுக்குக் கிணுகிணுக்கும் காப்புகள் அணிவித்திருக்கிறார்கள்
இதனால் அவள் எங்கேயிருக்கிறாள் என்பதை எளிதில் அறிய முடிகிறது.
முகத்தில் அழகுபடுத்தும் பொருள்களை
வண்ணப்பூச்சுகளைத் தடவிக்கொள்கிறாள்.
கண்களுக்கு, கழுத்திற்கு, உதடுகளுக்குப் போன்ற இடங்களுக்கும்
மேலும் கூடுதலான பூச்சுகளைத் தேவையான அளவிற்குப் போடுகிறாள்.
ஒரு விற்பனைச் சரக்கைப்போல மாறினாள்.
கிராமங்களில், நகரங்களில்
நடைபாதைகளில், தெருக்களில்
சேரிகளில், உயர்குடியினர் வகிக்குமிடங்களில்
உள்நாட்டில், வெளிநாட்டில் எல்லா இடங்களிலும் அவள் விற்பனைச் சரக்கானாள்.
பல்வேறு வழிகளில், பல விலைகளில் அவள் விற்கப்படுகிறாள்.
அவள் தொடர்ந்து விற்கப்படுகிறாள்.
வெளிப்படையாக விற்கப்படுகிறாள்.
சில இடங்களில் விற்பனையை நவீனமயமாக்கியிருக்கிறார்கள்.
பெண்ணின் வளர்ச்சியென்ற போர்வையில் நவீனமயமாக்கப்பட்டதாகப் பாராட்டுவார்கள்.
பெரும்பாலான முட்டாள் பெண்கள் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள், தங்கள் ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக விலங்குகளை மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த விலங்குகளை உடைப்பதற்குச் சிலர் உருவாகுகிறார்கள்;
அவர்களும்கூட இந்தச் சிக்கல்களில் சில தடவைகள் வந்து வலையில் சிக்கிக்கொள்கிறார்கள் அல்லது சிலர்
வேறு வழியில் இந்தப் பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
—-
(Courtesy The Game in Reverse Poems by Taslima Nasrin. Translated by Carolyne wright. George Brasiller Inc. Newyork)

Series Navigation

தமிழில்: சிபிச்செல்வன்

தமிழில்: சிபிச்செல்வன்

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

தமிழில்: சிபிச்செல்வன்


நற்குணம்
நீ ஒரு பெண்
அதை மறக்ாமலிருப்பது நல்லது
உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது
ஆண்கள் ஷாடையாகப் பார்ப்பார்கள்.
நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து விசிலடிப்பார்கள்.
நீ தெருவைக் கடந்து பிரதான சாலையில் நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னை ஒழுக்கங்கெட்ட பெண்ணென்று திட்டுவார்கள்.
உனக்கு நற்குணமில்லையெனில்
நீ திரும்பி போகலாம்,
நற்குணமிருந்தால்
இப்போது நீ நடந்துகொள்வதைப்போலவே
தொடர்ந்து செய்
ஓடு! ஓடு!
உன் பின்னால் ஒரு நாய்க்கூட்டம்
ஞாபகம், ராபீஸ், (வெறிநாய்க்கடிநோய்)
உன் பின்னால் ஒரு ஆண் கூட்டம்
ஞாபகம், பாலுறவு நோய் (சிபிலிஸ்)
ஒரு சில வார்த்தைகள்
“எல்லா வீடுகளிலும் அவர்கள் ஒரு பொருளை விற்கிறார்கள்.”
– யார் அவர்கள் ?
“பெண்கள்”
– அவர்கள் எதை விற்கிறார்கள் ?
“சுதந்திரம்”
– வாங்கும் பொருளுக்கு மாற்றாக எதைத் தருவார்கள் ?
“கொஞ்சம் உணவு தருவார்கள், அணிந்துகொள்ள கொஞ்சம் புடவைகள்”
மேலும் கொஞ்சம் வாரமொருமுறை மாமூல் உடலுறவு” இருக்கிறது.
– சுதந்திரத்தைத் தவிர இந்த உலகில் வேறு என்ன பெரியதாக என்ன இருக்கிறது ?
சுதந்திரத்திற்கு விலையில்லை. மனித உரிமை சட்டத்தின் பார்வையில் இவை சட்டத்திற்குப் புறம்பானவை.
“அவள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இந்தச் சமூகம் சட்டப்படி அவளுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை”
தன் சொந்த காலில் நிற்பதற்கும், நடப்பதற்கும் அவளால் முடியுமா ?
“இதுவரையில் இல்லை”
– அவளுடைய உணவு, உடைக்கு யாரையும் சந்திராமல் தானே வாழ முடிவெடுத்தால் அவளால் சிரிக்கவும் பேசவும் இயலுமா ?
‘இதுவரையில் இல்லை. ‘
நமது சமூகத்தின் வழக்கம் என்னவெனில் விற்கப்பட முடியாதவற்றை ஏளனமாகப் பார்ப்பது.
– இந்த சட்டதிட்டங்களை யார் உருவாக்கினார்கள் ?
“சில ஆண்கள் ?”
மகத்தான விஷயம்தான், நல்லது ஆண்கள் நன்றாக அறிவார்கள்
வியாபார தந்திரங்களையும், நிறுவனத்தின் சில்லறைத்தனமான விதிமுறைகளையும்.
—-
sibichelvan2003@yahoo.co.in

Series Navigation

தமிழில்: சிபிச்செல்வன்

தமிழில்: சிபிச்செல்வன்

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட் )

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

தமிழில்: சிபிச்செல்வன்


நற்குணம்
நீ ஒரு பெண்
அதை மறக்காமலிருப்பது நல்லது
உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது
ஆண்கள் ஜாடையாகப் பார்ப்பார்கள்.
நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து விசிலடிப்பார்கள்.
நீ தெருவைக் கடந்து பிரதான சாலையில் நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னை ஒழுக்கங்கெட்ட பெண்ணென்று திட்டுவார்கள்.
உனக்கு நற்குணமில்லையெனில்
நீ திரும்பி போகலாம்,
நற்குணமிருந்தால்
இப்போது நீ நடந்துகொள்வதைப்போலவே
தொடர்ந்து செய்
ஓடு! ஓடு!
உன் பின்னால் ஒரு நாய்க்கூட்டம்
ஞாபகம், ராபீஸ், (வெறிநாய்க்கடிநோய்)
உன் பின்னால் ஒரு ஆண் கூட்டம்
ஞாபகம், பாலுறவு நோய் (சிபிலிஸ்)
ஒரு சில வார்த்தைகள்
“எல்லா வீடுகளிலும் அவர்கள் ஒரு பொருளை விற்கிறார்கள்.”
– யார் அவர்கள் ?
“பெண்கள்”
– அவர்கள் எதை விற்கிறார்கள் ?
“சுதந்திரம்”
– வாங்கும் பொருளுக்கு மாற்றாக எதைத் தருவார்கள் ?
“கொஞ்சம் உணவு தருவார்கள், அணிந்துகொள்ள கொஞ்சம் புடவைகள்”
மேலும் கொஞ்சம் வாரமொருமுறை மாமூல் உடலுறவு” இருக்கிறது.
– சுதந்திரத்தைத் தவிர இந்த உலகில் வேறு என்ன பெரியதாக என்ன இருக்கிறது ?
சுதந்திரத்திற்கு விலையில்லை. மனித உரிமை சட்டத்தின் பார்வையில் இவை சட்டத்திற்குப் புறம்பானவை.
“அவள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இந்தச் சமூகம் சட்டப்படி அவளுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை”
தன் சொந்த காலில் நிற்பதற்கும், நடப்பதற்கும் அவளால் முடியுமா ?
“இதுவரையில் இல்லை”
– அவளுடைய உணவு, உடைக்கு யாரையும் சந்திராமல் தானே வாழ முடிவெடுத்தால் அவளால் சிரிக்கவும் பேசவும் இயலுமா ?
‘இதுவரையில் இல்லை. ‘
நமது சமூகத்தின் வழக்கம் என்னவெனில் விற்கப்பட முடியாதவற்றை ஏளனமாகப் பார்ப்பது.
– இந்த சட்டதிட்டங்களை யார் உருவாக்கினார்கள் ?
“சில ஆண்கள் ?”
மகத்தான விஷயம்தான், நல்லது ஆண்கள் நன்றாக அறிவார்கள்
வியாபார தந்திரங்களையும், நிறுவனத்தின் சில்லறைத்தனமான விதிமுறைகளையும்.
—-
sibichelvan2003@yahoo.co.in

Series Navigation

தமிழில்: சிபிச்செல்வன்

தமிழில்: சிபிச்செல்வன்

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

தமிழில்: சிபிச்செல்வன்


வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன்

பிளவுற்றல்
அவர் உன் தந்தை, உண்மையில் அவர் உனக்கு ஒன்றுமேயில்லை.
அவன் உன் சகோதரன், உண்மையில் அவன் உனக்கு ஒன்றுமேயில்லை.
அவள் உன் சகோதரி, உண்மையில் அவள் உனக்கு ஒன்றுமேயில்லை.
நீ மட்டுமே தனியானவள்.
உனக்கு நண்பர்கள் என்று சொல்பவர்கள்கூட உனக்கு ஒன்றுமேயில்லை
நீ மட்டுமே தனியானவள்.
நீ அழும்போது, உன் விரல்கள்
கண்ணீரைத் துடைக்கும், அந்த விரல்கள் உன்னுடையவை.
நீ நடந்தால், உன் கால்கள்
நி பேசினால், உன் நாக்கு
நீ சிரித்தால், உன் மகிழ்வான கண்களில் உன்னுடைய நண்பர்கள்
உன்னைத்தவிர உனக்கு வேறு யாருமில்லை,
விலங்குகள் இல்லை அல்லது தாவரங்கள்கூட இல்லை.
ஆனால் நீ மட்டும் உனக்கென்று அடிக்கடி கூறுகிறாய்
அது உண்மைதானா ?

எளிய பேச்சு ( Simple Talk )
சுற்றி அலைந்து கொண்டிருக்கும் குரோமாசோமின் பெயர் ஙீ
வேகமாகச் சுற்றும் இன்னொரு குரோமாசோமின் பெயர் ஙீ
சீ குரோமாசோமுவைவிடை வேகமாகச் சுற்றக்கூடியது அது.
அடிப்படையில் எந்த வித்தியாசமுமில்லை ஙீக்கும் சீக்குமிடையில் கிக்கும் ஙிக்குமிடையில் என்ன
வித்தியாசமிருக்குமோ, அல்லது ஸிக்கும் ஷிக்குமிடையில் கி அல்லது ஙி ஒன்றைவிட ஒன்று ளிவின் எடை, அளவு
அல்லது றியின் எடை, அளவில் ஒன்றைவிட ஒன்று குறைந்ததல்ல.
ஙீக்கும் சீக்குமிடையில் ஒன்றைவிட ஒன்று அளவில் குறைந்ததல்ல.
ஙீஙீலிருந்து ஒருவன் பிறந்தான், ஙீசீலிருந்து ஒருவன் பிறந்தான், ஒன்றிரண்டு உடற்கூறு வித்தியாசங்கள் தவிர வேறொன்றும் இல்லை. அவர்கள் சிரிப்பார்கள், அழுவார்கள், சாப்பிடுவார்கள், உறங்குவார்கள் சிறிது சிறிதாக அவர்கள் வளர்கிறார்கள்.
மனிதர்களின் நற்குணங்களோடும், குற்றங்களோடும் குறிப்பிடத்தக்க மிகக் குறைவான வித்தியாசங்கள்தான் இவர்களுக்கிடையே.
அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதற்கு ஒரு காரணமுமில்லை,
ஒரு பிரிவினர் பளபளக்கும் நாற்காலியைப் பிடித்துவிட்டார்கள்.
கொஞ்சம் கடுமையானதாகவுடைய படுக்கை விரிப்பு, எண்பது சதவீத சொத்துக்களின் அதிபதி.
இன்னொரு தட்டில் கிடக்கிறது மீனின் தலை, இறைச்சியின் எலும்புகள் வீட்டுத் தலைவனுக்காக
மணம் வீசும் எண்ணெய் கட்டில்கள் மற்றும் மருதாணி சாந்து
ஙீக்கும் ஙீக்கும் இடையில் இருபதுக்குமிடையேயான உயர்வு தாழ்வு
இன்னும் சீ அமர்ந்திருக்கிறது, ஙீன் தோள்மீது; சீ மகிழ்வோடு கால்களை ஆட்டுகிறது,
விசிலடித்துக் கைகளை ஆட்டுகிறது.
ஙீன் கழுத்துப் பின்புறத்தில் ஒரு கட்டி, ஙீன் முழங்காலில் வலி, இடுப்பிலே சுளுக்கு
நாம் அனைவருமே இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் நாம் யாரும் இது குறித்து ஒரு வார்த்தையும் பேசுவதில்லை.
எங்கள் நாக்குகள் வெட்டப்பட்டுள்ளன. எங்கள் உதடுகள் தைக்கப்பட்டுள்ளன.
எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன, எங்கள் கால்களில் விலங்கு போடப்பட்டுள்ளன.
நாங்கள் யாராவது எப்போதாவது ஒரு வார்த்தை கூறியிருக்கிறோமா ?
—-

Series Navigation

தமிழில்: சிபிச்செல்வன்

தமிழில்: சிபிச்செல்வன்