கவிக்கட்டு —- 46
சத்தி சக்திதாசன்

புதிதாய்ப் பிறந்தவளோ !
புதிதாய்ப் பிறந்தவளோ
பெண்ணாய்ப் புலர்ந்தவளோ
இசையாய்ப் பொழிந்தவளோ
மலராய் மலர்ந்தவளோ – இவள்
புதிதாய்ப் பிறந்தவளோ
கனவாய் விளைந்தவளோ
மணமாய்த் தவழ்ந்தவளோ
பனியாய்க் குளிர்ந்தவளோ
நிலவாய் ஒளிர்ந்தவளோ – இவள்
புதிதாய்ப் பிறந்தவளோ
நினவாய் வாழ்ந்தவளோ
நிழலாய்த் தொடர்ந்தவளோ
நிஜமாய் மொழிந்தவளோ
நீராய் நனைந்தவளோ – இவள்
புதிதாய்ப் புலர்ந்தவளோ
மலையாய் உயர்ந்தவளோ
மனமாய் உறைந்தவளோ
மதியாய் உதிர்ந்தவளோ
மரமாய் நிமிர்ந்தவளோ – இவள்
புதிதாய்ப் பிறந்தவளோ
நேற்றாய் நெகிழ்ந்தவளோ
இன்றாய் இனிப்பவளோ
நாளை இருப்பவளோ
நானே முகிழ்த்தவளோ – இவள்
புதியாய்ப் பிறந்தவளோ
சிறகாய் விரிந்தவளோ
சிரிப்பாய் கனிந்தவளோ
சிறப்பாய் வளர்த்தவளோ
சிந்தனையாய் சுழன்றவளோ – இவள்
புதிதாய்ப் பிறந்தவளோ
எனக்காய்ப் பிறந்தவளோ
என்னையே நினைந்தவளோ
என்னோடு கலந்தவளோ
என்னையே நிறைத்தவளோ – இவள்
புதிதாய்ப் புலர்ந்தவளோ
****
என்னை நீ விட்டு
பொட்டு வைத்தவொரு
பட்டுப் பெண்னென
சிட்டு நீ வருகையில்
தொட்டு நினவுகள்
எட்டுத் திசைகளில்
முட்டிச் சிதறியே
மொட்டு விரிந்தது
சொட்டு விலகியே
கட்டு உணர்வுகள்
பூட்டுத் திறந்தொரு
மட்டுத் தந்தொரு
வீட்டு ஆசைகள்
கேட்டு வாங்கியே
பாட்டுச் சொல்லிய
ஏட்டு அறிவுகள்
கட்டுக் கவிதைகள்
தட்டிக் கொடுக்கவும் – ஏனெனை
விட்டு நீ விலகினாய்
****
சத்தி சக்திதாசன்
- கதறீனா
- அறிவியல் புனைகதை – ஜீன் திருடனின் விநோத வழக்கு (மூலம் நான்ஸி க்ரெஸ்)
- ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி…
- பூ ை ன சொன்ன க ை த
- முழுமை
- காரின் மனக்கதவுகள்
- குறுநாவல் – து ை ண – 2
- ஒப்பிலான்
- சுனாமியும்,நிதியுதவியும் உலக நாடுகள் கூறும் மனிதாயமும்- மக்களாண்மை நோக்கிய தேடலும்
- வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம் – 2
- வரலாறும் மார்க்சியமும்
- புத்தர் இயல்பு (மூலம் ZEN)
- மண்ட்டோ படைப்புகள் விமர்சனக்கூட்டம்
- பெரியபுராணம் – 28 – ( கண்ணப்பநாயனார் புராணம் தொடர்ச்சி )
- வானம் வசப்படும் (மூலம் – Michaelangelo)
- பலி (மூலம்- MARCOSAN)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு)
- சோதி
- ஆதங்கம்
- நிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்
- பெண்ணியம் தொடர்பான வெளியீடுகளின் பின்னணியில் பெண்கள் சந்திப்பு மலர் 2004
- இந்தோனேசியா தீவுகளில் உண்டாகும் பூகம்பம் இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியைத் தூண்ட வல்லது (3)
- இளமையும் ஞானமும் (மூலம் – Michaelangelo)
- கோவா – கூடியாட்டம் – குட்டிச் சாத்தான்(மஞ்சரி ஃபிப்ரவரி 1955 – பகுதி 2)
- நேர்முகமும் எதிர்முகமும்
- கடிதம் ஜனவரி 27,2005
- கடிதம் ஜனவரி 27 ,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!
- கடிதம் ஜனவரி 27,2005
- கடிதம் 27, ஜனவரி 05 – ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9
- விடைபெறுகிறேன்
- கடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை
- கழுதையின் காம்போதி !
- கடிதம் ஜனவரி 27,2005 – பசுமை தாயகம் வேண்டுகோள்
- கடிதம் ஜனவரி 27,2005
- ஒரு மனுதர்மவாதியும், ஒரே பொய்யின் ஆயிரம் வடிவங்களும்
- தமிழ்
- இயற்கையே என் ஆசான்
- கீதாஞ்சலி (12) – விழித்தெழுக என் தேசம்!(மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- இணக்கு
- கவிதைகள்
- மீட்டெடுக்கச் சொல்கிறேன்
- கவிக்கட்டு —- 46
- ஓரு உரைநடைச் சித்திரம்.
- நபிகள் நாயகம் – ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள்
- கடிதம் ஜனவரி 27,2005 – பெரியார் மதம்
- ஓவியக் கண்காட்சி
- கடிதம் ஜனவரி 27,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!
- ராம்தாஸ் – சேது – திருமாவளவன் சூளுரை