வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
வெண்ணிலாப்ரியன்.
தனித்துத்தொங்கும் கிளையில்
கற்பிழந்த கனியை
தரைக்கு வார்க்காமல்
கதறக்கதற
கொறித்துக்கொண்டிருக்கும்
அணில்
நேர்மையற்ற லாவகத்தோடு.
சிறு சிறு பாதங்களுடனான
தத்தக்க பித்தக்க பயணத்தில்
கிழிந்து கிடக்கும்
ஆணுறைப்பலூனை
குனிந்து எடுப்பதைத் திட்டுவாள்
இப்போதும்
ஐந்து குழந்தைகளின் தாய்.
வாய் கோணாத
குருட்டுக்கிழவன்
எச்சில் தெறிக்காமல்
இசைத்துக்கொண்டிருப்பான்
ஓட்டை பெரிதான
புல்லாங்குழலை
யாரோ போட்ட
செல்லாக்காசறியாமல்.
வெளுத்த மூக்கு விடைத்து
நிமிர்ந்து பார்த்து
பாவமென்று நகரும்
கிழட்டுக்கழுதை
தன்னிலை மறந்து.
சொறிக்கையும்
யானைக்காலும் கண்டு
‘நல்ல கை ‘
பாக்கெட்டுக்குள் சில்லறை அலசும்
அகப்படாத கணத்தில்
கசிந்த இரக்கத்தை வழித்துக்கொண்டு
இயலாமை பார்வைக்குள்
ஓடி ஒளிவான்
நடுத்த வறுமையின் வாசி.
காலை அகற்றி
வயிற்றைப்புரட்டி
மடுவை திரட்டும் வேளையில்
குபுக் குபுகென்று கொட்டும்
பாலை நினைத்து
காலுக்குப்பின் கன்று வர
மிரட்சியில்
அவசரமாய் நிறுத்திக்கொள்ளும்
வெள்ளைப்பசு.
மூன்று நாள் ‘சும்மா ‘ கழிந்த வெறுப்பில்
பூச்சேலையை துவைத்திருப்பாள்
புது விபசாரி
படக்கென்று வந்தமர்ந்த
பட்டாம்பூச்சி
றெக்கை கிழியப்பறக்கும்
‘சும்மா ‘ ஏமாந்த வெறுப்பில்.
கழுதையின் வாயில்
கால்வாசி மீதமிருக்கும்
பிங்க் நிற கைக்குட்டையின்
கை வரைபூ பார்த்து
கடைசியாய் நினைப்பாள் காயத்ரி
கம்மாக்கரையில் படுத்துக்கிடந்ததை
இதுதான் கடைசி என்று
இன்னொரு முறை.
பத்திரிகையின்
தலைப்பைப் பிடித்துக்கொண்டு
கண்களை மேயவிட்டுருப்பான்
மீசை முளைக்காத பையன்
எதிர் வீட்டு
முடி முளைத்த
மாமியின் கால்களின் மேல்.
கணத்தில் தோன்றி
கணத்தில் மறைந்தாலும்
கவிதைகளாயும்
கண்களில் விரியும்.
எக்கணத்தில் வந்தாலும்
கவிதையாய் நீளாது
கிழிந்து போன
எனது
கால்சராயின் ஓட்டை பார்த்து
குமரிகள்
சிரித்த சிரிப்பு
இன்னும் இவ்வீதியில்.
வெண்ணிலாப்ரியன்.
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004
- புனிதமானது
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- நீங்களுமா கலைஞரே ?
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- பகையே ஆயினும்….
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- மோகனம் 1 மோகனம் 2
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- புத்தர்களும் சித்தர்களும்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- மரபுகளை மதிக்கும் விருது
- மெய்மையின் மயக்கம்-29
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- பெயரில் என்ன இருக்கிறது ?
- அம்மா
- அடியும் அணைப்பும்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- கடிதம் டிசம்பர் 9,2004
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- பாரதியும் கடலும்
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பேட்டி
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- புத்தர்களும் சித்தர்களும்
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- காதல் கடிதம்
- இப்படித்தான்….
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்