புகாரி
நீ தேடாத
ஒரு சுகம்
உன்னைத் தேடி வரும்
நீ அனுபவிக்கக் கூடாத
ஒரு துக்கம்
உன்னை அனுபவிக்கும்
நீ நினைக்காத
ஒரு பாவத்தை
நீ அறிந்தே செய்து முடிப்பாய்
நீ எண்ணாத
ஒரு புண்ணியத்தை
நீ அறியாமலேயே செய்திருப்பாய்
பயந்து பயந்து
ஓர் உரிமையை நீ
இழப்பாய்
பயமே இன்றி
ஓர் உரிமையை நீ
பெறுவாய்
நீ விளைத்த
பழங்களெல்லாம்
நீ உண்ணமாட்டாய்
நீ உண்ணும்
கனிகளையும்
நீ விளைத்திருக்கமாட்டாய்
.
வாழ்க்கை என்பது
இப்படியாய்த்
தட்டுப்பாடற்ற
திடார்ச் சம்பவங்களின்
தொழிற்சாலைதான்
.
அடிக்கும்போதெல்லாம்
மாங்காய் விழுந்துவிட்டால்
ஆவல் செத்துவிடும்
தேடாதபோதும்
தேடிவரும் முத்தத்தால்
சித்தம் பூத்துவிடும்
பிறப்பே
இந்த அதிசய விளையாட்டரங்கின்
நுழைவு வாயில்தான்
இறப்போ
புதிய புல்லரிப்புகளோடு
பூமியில் பிறக்கும்
இளைய இதயங்களுக்கு
இடம் விடத்தான்
.
எல்லாச் சிலிர்ப்பையும்
இழந்த முதுமையை
எலும்பில் சுமந்து
இருப்பது ரணம்
இறப்பதே பூரணம்
.
ஆடி முடித்த
அனுபவ வேர்கள்
அளவற்ற அறிவுரைகளை
அள்ளியள்ளி அளந்தாலும்
புத்தம்புதுத் திருப்பங்களின்
படையெடுப்போ ஓய்வதில்லை
பிஞ்சு நெற்றியில்
புதிய சுருக்கங்களைப்
பிறப்பிக்காமல் விடுவதில்லை
தோல்விகளாகும்
நம் முயற்சிகள் எல்லாம்
சேமிக்கப் படுகின்றன
ஒருநாள் வீசும் வசந்தம்
உன் அதிர்ஷ்டமல்ல
நீ நிதமும் எறிந்த
நம்பிக்கைக் கற்களுக்கு
மொத்தமாய்க் கிடைத்த
கனிகள்
.
அடடா…
அலுத்துக்கொள்ளாமல்
இப்படிக்
கொடுத்துக் கொடுத்துப்
பூத்து நிற்கும்
இந்த வாழ்க்கைதான்
எத்தனை இனிமையானது
இதை வாழக் கிடைத்த
பாக்கியம்தான்
என்றும் புனிதமானது
*
அன்புடன் புகாரி
buhari@gmail.com
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- புத்தர்களும் சித்தர்களும்
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- பேட்டி
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- மெய்மையின் மயக்கம்-29
- மரபுகளை மதிக்கும் விருது
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- புத்தர்களும் சித்தர்களும்
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- பாரதியும் கடலும்
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- அடியும் அணைப்பும்
- மோகனம் 1 மோகனம் 2
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- பகையே ஆயினும்….
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- இப்படித்தான்….
- காதல் கடிதம்
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- புனிதமானது
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்
- அம்மா
- பெயரில் என்ன இருக்கிறது ?
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- நீங்களுமா கலைஞரே ?
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?