SMS கவிதைகள்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

த. ஆரோக்கிய சேவியர்


1 கடவுளிடம் நான் கேட்ட வரங்கள்

உன் மனம் நனைக்கும் மழையாக
உன் கண் கவரும் பசுமையாக
உன் செவியில் தலாட்டு இசையாக
உன் உடல் தழுவும் தென்றலாக
நீ முத்தமிடும் குழந்தையாக
நீ கட்டி அனைத்து தூங்கும்
தலையனையாக
உன்னை பரவசமூட்டும் என்
எழுத்தாக எப்போதும் நான்
இருக்க வேண்டும்.

2 கணிணி தேடலில் கிடைத்த கண்மனியே
உன்னை கணப்பொழுதில் தவறவிட்டேன்
காலங்கள் கடந்ததடி
காத்திருக்கிறேன் காயங்களோடு
மருந்திட வேண்டாம்
மரிக்கும் முன் மீண்டு(ம்) வா.

3 காதலி உன் கடைக்கண் பார்வை பட
கால் கடுக்க தவம் கிடந்தேன்
தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும்
சொல்லென்னா தவிப்புற்றேன்
உன் போதையூட்டும் விழிகளில் விழ
தினம் காத்துக் கிடப்பேனடி
முகம் மலரும் சிரிப்பைக் காண
கண் கோடி வேண்டுமடி
நீ கடக்கும் ஒரு நொடியில்
என்னை நான் மறப்பேனடி
உன் ஸ்பரிசத்தில் பரலோகம்
காண்பேண்னடி.

4 காத்திருத்தலே தவமாகும்
நண்பகலிலும் நிலா காயும்
வாழ்வின் போக்கை வழி மாற்றும்
வார்த்தைகள் கவிதைகள் ஆகும்
ஆடைகள் அழகாகும்
பார்வையில் மின்சாரம் பாயும்
காதல் கொண்டால்!

த. ஆரோக்கிய சேவியர்,
சிங்கப்பூர்.

new_sax@rediffmail.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்