வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்
வெண்ணிலாப்ரியன்.
**
எல்லாப்பட்டாம்பூச்சிகளும்
தூங்கிய பிறகுதான் – நீ
குளித்துவிட்டு
கூந்தலை விரித்தாய்…
ஆயினும்
எப்படியோ
வந்துவிட்டிருக்கின்றன- பார்
இதோ
இரண்டு பட்டாம் பூச்சிகள்.
**
உன் கூந்தலில்
நான்
விழுந்தது
தலைப்புச்செய்தியோ.. ?
உன்
கூந்தலை நோக்கி
பட்டாம்பூச்சிகளின்
படையெடுப்பு.
**
என்னைப் பைத்தியமாக்கியது போதும்
இனிமேலும்
குளித்துவிட்டு
கூந்தலை உலர்த்தாதே!
பாவம் பட்டாம்பூச்சிகள்.!
**
வண்ணத்துப்பூச்சியின் மனைவி
விவாகரத்து கேட்கிறாள்.
உன் கூந்தலிலேயே
பழியாய்க்கிடக்கிறானாம்
அவள் கணவன்.
இன்னொரு முறை
அவன் வரும்போது
உனது
கூந்தலை விரித்து வைக்காதே!
தான் மோசம் போய்விட்டதாய்
அந்தபட்டாம்பூச்சியின் மனைவி
என்னைப் பார்க்கும்போதெல்லாம்
புலம்புகிறாள்
அவளுடைய கூந்தலை என்னிடம் காட்டி.
**
வண்ணத்துப்பூச்சிகள்
விண்ணப்பம் போடுகின்றன.
இருக்கும் நிறங்கள் போதாம் அதற்கு
இன்னும் வேண்டுமாம்.
ஒரே ஒரு நாள்
மட்டும்
உன் கூந்தலில்
ஒதுங்க வேண்டுமாம்
ஆறு கால பூஜையும் நடத்தி.
**
பட்டாம்பூச்சியிடம்
பெர்மிஷன்
கேட்டுவிட்டுதான்
நானும் வந்தேன் முதலில்.
இப்போது
பாவம் – பட்டாம்பூச்சிகள்!
என் அனுமதி வேண்டி
இரவிலும் நீண்ட கியூவில்.
***
பேருந்தில்
ஜன்னலருகில் அமராதே!
பார்
எவ்வளவு தூரம்தான்
பறந்து வருகின்றன
பட்டாம்பூச்சிகள்!
***
உனக்குள்__
நேற்று..
அது!
இன்று..
நான்!
நாளை…
யாரோ!
உன் கூந்தலில்__
நேற்று…
அது மட்டும்!
இன்று…
நானும்!
நாளை…
நான் மட்டும்!
***
பூந்தோட்டமெல்லாம்
வெறிச்சோடிக்கிடக்கின்றன..
பூக்களெல்லாம்
புலம்புகின்றன..
கன்னியாகவே
காலத்தைக்கழிக்கின்றனவாம்
பூக்கள்!
போதும்.
கூந்தலை தவழவிடாதே!
பூக்கள் பிழைத்திருக்கட்டும்
தன் சந்ததிகளோடு!
பட்டாம் பூச்சிகள்
பூக்களையும்
நாடட்டும்!
**
என்ன அதிசயம் ?
கூந்தலில் இருந்து
அவைகளை விரட்டிவிட்டு
உன்
முகம் பார்த்தால்
அட!
அங்கேயும்
இரண்டு பட்டாம்பூச்சிகள்
இறக்கைகளைச்சிமிட்டி!
**
என்ன செய்வது ?
தொந்தரவு தாங்க முடியவில்லை.
நிரந்தரமாய்
அந்த
அறிவிப்புப்பலகையை வைத்துவிட்டேன்
உன் கூந்தலில்!
‘இங்கே பூக்கள் விற்பனைக்கல்ல ‘
‘பட்டாம்பூச்சிகள்
நுழைய அனுமதி இல்லை ‘
‘வெண்ணிலாப்ரியன்- ஜாக்கிரதை ‘
- அவசர உதவி வேண்டுகோள்!
- வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?
- பொதுச்சிவில் சட்டத்துக்கு ஆதரவாக…
- ஆவிகள் புசிக்குமா ?!
- நீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44
- பாசத்தைத்தேடி
- மனித அறிவியலின் பரிணாமம்
- கங்கவரம்
- நிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்
- கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே…
- ஷேக்ஸ்பியரும் வெங்காயமும்
- வெகுஜன இதழ்களின் வியாபாரத் தந்திரங்கள்
- சும்மா இருடா
- பெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…:அமெரிக்க ஆய்வாளரின் தமிழ்-நூலுக்கு ஒரு அணிந்துரை
- கவிபாரதிகள்
- நுால் அறிமுகம் : ‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி
- 21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)
- பேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )
- காத்திருப்பு
- என் அழகும் மாறும்
- பெரியபுராணம் – 16 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- அருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்
- அம்மாவின் சமையல்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்
- நீண்ட இரவு தொடர்கிறது…
- வாரபலன் நவம்பர் 4,2004 – குஞ்ஞாலுக்குட்டியின் பெண்குட்டி விவகாரம், அமோக விளைச்சல், அந்தத் தெரு, எழுதுங்க , கம்யூனிஸ்ட் கால் பந்த
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- மனுஸ்மிருதியை நிலைநாட்ட பட்டப்பெயர்கள்….
- ஆத்திரக் கும்மி
- கடிதம் நவம்பர் 4, 2004 – வளமான பாதையில் திருமாவளவன்
- கடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்!
- கடிதம் நவம்பர் 4,2004 -இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசிய உரை
- கடிதம் நவம்பர் 4,2004 – இரா.முருகனின் மொழியாக்கம்
- கடிதம் நவம்பர் 4,2004 – அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு
- அவளோட ராவுகள் -1
- ஓவியப்பக்கம் – ஐந்து – நளினி மலானி – கருத்தாழம் மிக்க நிர்மாணக் கலை
- ப. சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம் ‘ : ஒரு பார்வை
- உரத்த சிந்தனைகள்- 6
- ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ பற்றி – பேராசிரியர் ரூமிக்கு பிரியமுடன்
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்
- நெஞ்சில் மின்னிய கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 8
- பி பி ஸி செய்திக் குறிப்பு- தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் பற்றிய ஆய்வு
- தமிழம் டாட் நெட்
- மெய்மையின் மயக்கம்-24
- அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்
- அ.முத்துலிங்கம் பரம்பரை – 7
- அஞ்சலி: இயக்குனர் வான் கோ – நிறைவேற்றப்பட்ட ஃபட்வா
- தமிழின் மறுமலர்ச்சி – 5
- தமிழின் மறுமலர்ச்சி – 4
- குடை பிடிக்கும் நிழல்
- மழைப் பயிர்
- உறவென்றால்…
- நித்யா