ஐந்து கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


01

அழைத்துப் போய்வந்த
ஆசிரியரின் அத்தனை
கெடுபிடிகளுக்குப் பின்னும்
இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்
இன்பச் சுற்றுலா என்றே.


02

இலவசமாய்
அரிசி டிவி

இயற்கை
உபாதைக்கு

கட்டண
கழிப்பிடங்கள்.


03

எதிர்வரும் பேருந்தில்
அடிபடும் அபாயம்.
இடப்புறம் நகர்ந்து
நடந்தேன்.
இளவயது மாதொருத்தியை
இடித்தபடி.


04

யாருமற்ற பூங்காவில்
ஊஞ்சல்
ஆடிக்கொண்டிருக்கிறான்
என் மகன்.
எவரையோ சேருமென்று
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
நான்.


05

ஏதோவொன்றின்
தொடர்பாகவே

எதுவொன்றின்
நினைவும்.


Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

ஐந்து கவிதைகள்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

க்ருஷாங்கினி


( 1 )
சூடு கொண்டு இழுத்து ஒட்டப்பட்ட
மற்றும்
இறுக்கி முடிச்சிட்ட, பொருளடைக்கப்பட்ட
பிளாஸ்டிக் பைகள் எனைக் கடந்தும்
என் முன்னுமாக வாழ்க்கையெங்கும்;
காற்றும் சற்றே கலந்து
அடைக்கப்பட்ட தயிர்,
அடுத்த நாள் சமையலுக்கான எண்ணெய்,
பகவானுக்கான மலர்,
பல்போனவருக்கான மிருதுவான சபோட்டா,
மொறுமொறுப்பான பாப்கார்ன்,
கொஞ்சம் கனவுகள்,
அலுவலகத்தில் வீசியெறியப்பட்ட
கடும் சொற்கள் அடைக்கப்பட்டதாய்
மற்றொன்றும் இன்னமும்கூட
தாய்,மனைவி மற்றும்
தனித் தனித் தனியாய் அடைக்கப்பட்ட
உறவுகள் கொண்டதாய்-
இணைந்தால் கெட்டுவிடுவதாய்
எதிரெதிரானதாய்
இணையமறுப்பதாய் என
எல்லாவற்றையும் கொண்ட பெரிய
பிளாஸ்டிக் உறையாய்
குளிர்பதனப் பெட்டியின் கருவரையில்
அடைக்கப்பட்டு இறுகிய கெட்டிப்பாலென
இழுத்து சீலிட்ட
பிளாஸ்டிக் உறையுள் ஜில்லிட்ட நானும்,
கடந்த காலத்திலும்
நிகழ் காலத்திலும்
எதிர் காலத்திலும் கூட
எங்கெங்கும் எதிர்ப்படும் பிளாஸ்டிக் உறைகள்
உடன் கூடிய நெடுவழிப் பாதையின்
நெடும் பயணமிது.
—-
( 2 )
கூடும் கூரையுமின்றி
ஓடும் வண்டியின் மேற்பரப்பில்
சிறிய பெரிய பச்சை மண் மூர்த்திகள்;
அடுக்க இயலாதென்று பரத்தி வைக்கப்பட்டு
சக்கரம் கொண்டு அலுங்காமல்
இழுத்துச் செல்லப்படுகின்றன-
ஆங்காங்கின் தேவைக்கேற்ப.
தந்தையின் வாகனமாயும்
நந்தனின் கண் மறைப்பதாயும்
விடைத்து நின்ற விடைகள்
மணியோசையுடன்
இன்றோ ?
காயடிக்கப்பட்டு கால்களில் லாடமிட்டு
சாட்டையடியும் பட்டு-
சவாரிக்காரனின் தனயனை
மெலிந்து சுமந்து செல்கின்றன,
தார்ச்சாலைகளில்
துதிக்கவும், மிதிக்கவும், கரைக்கவும்,
—-
( 3 )
தொடர் நிகழ்
இழுத்துக் கட்டப்பட்ட நீலவானில்
குறுக்காவும் கோடாகவும்
புள்ளியென்றும் பறவையென்றும்- பின்
பெரியதாய் கண்களுக்கு அருகாகவும்
விஸ்வரூபம் எடுத்துத் தரைமீதாகவும்
வண்ணப் புகையும் வண்ணமற்ற
வெண்புகை மேகக்கோடிட்டும்
மல்லாந்து, நிமிர்ந்து,’சர்’ரெனப் பாய்ந்து
கீழிறங்கி வட்டமடித்து சப்தமிட்டு
எத்தனையோ வித்தை காட்டும்.
பெரும் கோபுரங்களில் மறைந்தும்
சற்றே கண் சிமிட்டும் நேரத்தில்
வெயில் பளபளக்க வெளிப்பட்டும்
வாயைப் பிளக்கவைக்கும்
விமானம் அன்று,
எப்போதும் போலன்றி
உயர்ந்த கட்டிடம் பிளக்க
உயிர் பிளக்க, நலம் பிளக்க
புகை கிளப்பி ஊடுருவி
அழித்தது; அழிந்தது.
—-
( 4 )
பிரம்ம விருட்சம்
____
இடைவெளி இன்றி அந்த உயர
மரத்தில் அடுக்கப் பட்டிருந்தன
கம்பளிப் பூச்சிகள்-
நெருக்கி யடித்தாலும் கனவுகள் சுமந்தபடி.
எட்டா உயரத்தில்
ஏணி ஏறி, உச்சி வெயிலில்
எட்டிவந்தன தீயின் கங்குகள் சுற்றிலும்;
அங்கிங்கென்று அலைந்து சிதறியவை
ஒன்றன்மீது ஒன்றேறி-
கொதித்துக் கொத்தாகிக் குவியலாயின.
தப்பிக்கும் எண்ணத்தில்
சற்றே பின் நாளில் வெளிவரும் உமிழ்நீர்
உடனே சுரக்கக் கூட்டுப்புழுவாக
முயன்று தோற்றுத் தொங்கின
இழை முடிவில் வாய் வழியே-
கொத்தாகிக் குவியலாயின கொதித்து.
அள்ளையில் இறகு முளைத்து
வண்ணம் பல பரப்பி
அனைவரையும் ஈர்க்கும் -அவை
வண்ணத்துப் பூச்சிகள் ஆகாமலேயே
நிணநீர் வெளிவர, பச்சை ரத்தம்
பொசுங்கப் பரவிய சதை மணத்துடன்
கொதித்துக் கொதித்துக்-
கொத்தாகிக் குவியலாயின.
____
( 5 )
உயிர்
____
சிறு புழுமாட்டப்பட்ட கொக்கிநுனி நைலான் நூலுக்கோ
பிளாஸ்டிக் மணி மிதக்கும் நைலான் சதுரப் பரத்தலுக்கோ
பாலிதீன்பையினுள் அடைக்கப்பட்ட சிறு நீர்த் தேக்கம் தவறவிட்டோ
இங்கே தரையில் மண்ணில் கிடக்கிறது இந்த மீன்.
கண்களையும் பின் சதைகளையும் குறிவைத்துப் படையெடுக்கும்
அசையும் கண்ணிகொண்ட கயிறென வளைந்து வளைந்து எறும்புசாரி.
மின்னலும் இடியும் குளிர் காற்றும் சிறு தூரலும் மணமும்
ஒவ்வொரு துளியாய் மண்ணிலிறங்கி தாரையாகி
சிற்றோடையாகி சுழித்து மண்கலந்து பள்ளம் நோக்கி
சிறுநதியென சுழல்கொண்டு சுற்றிலும் நீர் பரவ,
எறும்பற்றுப் போனாலும் உயிர் காற்றுக்கு சுழித்தோடும் நீரிருந்தும்
அசைவற்று பிளாஸ்டிக் தாளென நீரின்மீதாக
மிதந்து செல்கிறது மீன்.
____
க்ருஷாங்கினி
nagarajan62@vsnl.net

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி