சடங்குகள்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

ஈழநாதன்


அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
கல்யாணம் கட்டி
புருஷன் வீடு போன அக்கா
அழுத கண்ணும்
சிந்திய மூக்குமாய்
திரும்பி வந்தாள்.

கல்யாணத்தன்று
வீட்டிலிருந்த
ஆட்டுக்கல்லை
அத்தானை மிதிக்கச் சொல்லி
அருந்ததியுடன் கூடிய
வசிட்டரையும்
அவருக்குக்
காட்டியிருக்கலாம்

ஈழநாதன்
—-
eelanathan@hotmail.com

Series Navigation

ஈழநாதன்

ஈழநாதன்