மாலை

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

சுமதி ரூபன்


கூட்டத்தின் நடுவே
கழுத்தோடு கைகொழுவி
முதுகோடு முகம் சாய்த்து
மோகித் துவழ
மெல்லக் கை விலக்கி
வெகுதுாரம்
அகன்று
விழி
தவிர்த்து
பல மணிகள்
வீணே தொலைய

கனக்கும் நெஞ்சை
வாஞ்சையுடன் கடிந்து
கண்ணீர் துளியை
வரிந்து உள்ளடக்கி
துாரப்புள்ளியாய்
உன் உருவம்
தேடி
களைத்து
வெறுமனே விழ

இன்னுமொரு மாலையில்
உன் மேல் பொதியான
காதுக்குள்
முணுமுணுத்தாய்
‘வீணாய் எதற்காக ?
அவலாய் அரைபடுவோம் ‘

சுமதி ரூபன் கனடா
—-
ssmith@ieccan.com

Series Navigation

சுமதி ரூபன்

சுமதி ரூபன்