வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

பனசை நடராஜன்


மார்க்கத்தைக் காப்பதாகச்
சொல்லிக் கொண்டு
அப்பாவி மக்களை
எதிரெதிரே மோதவிட்டு
உதிரம் குடிக்கும் ஓநாய்களாய்
மதவாத வேடதாரிகள்!
இதையறியாமல் நமக்குள்ளே
அடித்துக் கொண்டு
அழியும், செம்மறி
ஆடுகளாய் நாம்!!

இவர்களுக்கு..
‘ஏன் ? ‘ என்று
கேள்விக் கேட்கும்
அறிவுடையோர் கண்டால்
ஆகாது..

அடிவருடும்,..
ஆணைக்கு அடிபணியும்..,
ஆண்டவன் பெயராலே
கொலை புரியும்..,
அறிவு ஊனமாகப் பிறந்த
அடிமைகள்தான் வேண்டும்!!
(தொடரும்)

-பனசை நடராஜன், சிங்கப்பூர் –
(feenix75@yaaho.co.in)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்