நலம்…நலமறிய ஆவல்!!

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

வேதா மஹாலஷ்மி


எப்படி இருக்கே ?
அம்மா அப்பா நலமா ?
அண்ணன் செளக்கியமா ?
ஊர் கதை என்ன ?
நண்பனைப் பார்த்தாயா ?
உன்னை மறந்தே போனேன்…
எல்லாம் சுகம்தானே ? ?
….
கேட்கும் மற்றவர்க்குத் தெரியாது,
இறந்த உறவும் இருந்த உறவும்
திடாரென்று ஓர் இரவில்
‘இல்லை ‘ என்றானது…

எனக்கு, எல்லாமே..இனி
நீயென்றாகிப் போனது!!
—-
piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலஷ்மி

வேதா மஹாலஷ்மி