என் காதல் இராட்சதா …!!!!

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


!
____
உன் மெளனமான காதலே
எனை வதை செய்யும் போது..!
போதும்….
நீ மெளனமாகவே இருந்துவிடு.
அழுவதாக
சிாிப்பதாக
சிந்திப்பதாக
நாணுவதாக
உனக்குள் நீயே
என்னோடு பேசிக்கொள்வதாக
அடடே எத்தனை அர்த்தங்கள் எனக்குள்.
உன் மெளனங்களுக்குள்
நான் மூழ்கி எழும்போது
தினம் தினம்
புதிதாய் பிறக்கிறேன்.
—-
நளாயினி தாமரைச்செல்வன் , சுவிற்சலாந்து.

27-06-2003

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.