நீ எனை தொழும் கணங்கள்….!

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

நளாயினி தாமரைச்செல்வன்,சுவிற்சலாந்து.


என் உடலுக்கு
உயிர் தா…
என் இதயத்திற்கு
சுவாசம் தா..
என் நரம்புகளுள்
உணர்வு சேர்…
என் விழிகளுக்கு
ஒளியூட்டு…
எனக்குள் கவிதை
ஊற்றாய் வா…
நீ தந்த உயிர் மூச்சு
என்னை விட்டு
பிாியும் வரை
உன்னையே என் கவி
தொழுது நிக்கும்.
போடா போ..
நீ தந்து சென்ற தைாியங்கள்
என்னை வழிப்படுத்தும்.
நீயே நானான பின்
உன் கோபங்கள்
என்னை என்ன செய்து விட முடியும்..!
கரம் ஏந்திய
உன் பாதைவழிப்
பிச்சைக்காாியாய் நான்
உன் முன் .
முறைத்துப்பாற்து விட்டு
முகத்தை திருப்பிக்கொள்கின்றாய்.
ம்…!
ஆனாலும் உனக்குள்
என்னையே தொழுதபடி..!
எனக்குத் தொியாதா
உன் மனசு.
நீ என்னை
தொழும் கணங்கள் யாவும்
எனக்குள் கவி மழை.
ஆக்கம்
—-
10-05.2004

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.