விட்டில் என்றொரு பொய்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

நாகூர் ரூமி


====

எங்கிருந்தோ வேகமாய்
வந்து விழுந்தது விட்டிலொன்று
எரியும் திரியின் அடியில்.

கீழ் நோக்கி உருகிக்கொண்டிருந்த
மெழுகுவர்த்தியைவிட்டு
மேல் நோக்கிச் செல்ல
முயன்றுகொண்டிருந்தது
ஜ்வாலை.

விட்டிலைக் கொல்லும் நோக்கம்
வர்த்திக்கு ஏதுமில்லை
எனினும்
கொஞ்ச நேரத்திற்கெல்லாம்
பொய்யாகிப் போனது விட்டில்

ஜ்வாலையோடு ஜ்வாலையாய்
ஒளிர்ந்துகொண்டு.

— கணையாழி, பிப்ரவரி, 2001
ruminagore@hotmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி