நாகூர் ரூமி
சொல்லால் வந்ததுதான்
எல்லாம்
சிறகுகள் பிடுங்கப்பட்டதும்
சிறகுகள் காயம்பட்டதும்
பறக்க முடியாமல் போனதும்
மறக்க முடியாமல் போனதும்
எல்லாம்…
த்ரோணாச்சாரி என்ற துரோகாச்சாரிக்கு
தட்சிணையாய் கொடுத்த
கட்டைவிரலால் கட்டப்பட்டது
ஒரு சொல்
குரங்கொன்றைக் கொல்ல
மறைந்து நின்று மாமனித
அவதாரம் விட்ட அம்பிலிருந்து
அவதரித்ததொரு சொல்
பெண்ணைச் சோறாக்கி
பகிர்ந்துண்ணுங்கள் ஐவரும் என
பகர்ந்ததொரு பெண்ணிடமிருந்து
பிறந்ததொரு சொல்
மிராசு நிலத்தில் மாடு மேய
மாடுவைத்துப் பிழைத்தவனை
மனித மலம் தின்ன வைத்து
மயங்கி அவன் விழுந்தபோது
மயக்கம் தெளிந்து எழுந்தது
ஒரு சொல்
செத்துப்போகாமல் இருப்பதற்காக
செத்துப்போன மாட்டின் தோலை
உரிக்கப்போன உரிமையாளர்களை
விரட்டிச்சென்று காவல் நிலையத்தில்
அடித்தடித்துக் கொன்றபோது
அலறிச்செத்த வேதனையிலிருந்து
அரும்பி நின்றதொரு சொல்
கதறக்கதற ஏழைக்
கன்னிப்பெண்களை கத்தி முனையில்
கற்பழித்துவிட்டு கெரசின் ஊற்றிக்
கொளுத்திவிட்ட குறிகளிலிருந்து
வடிந்து வந்தது
ஒரு சொல்
கர்ப்பிணிப் பெண்ணின் நிறைவயிறை
கத்தியால் பிளந்து உயிர் மொட்டை
கொடுந்தீயில்வீசி கருகவிட்டதை
மறைந்திருந்து பார்த்த பயவிழிகளில்
நிறைந்திருந்தது ஒரு சொல்
சொல்லை மென்று
சொல்லைத் தின்று
செரிக்க முடியாமல்
செத்துப்போயின நம்
செல்லப் புறாக்கள்
எனினும் இன்றும்
ஞாயிற்றுக் கிழமைகளில்
அலைமோதுகிறது கூட்டம்
அமைதிப் புறாக்களின் சமாதிகளில்
அஞ்சலி செலுத்த.
ruminagore@yahoo.com
- சொல்லால் செத்த புறாக்கள்
- மெளனம்
- நழுவும் …
- ஆதிமுதல்….
- கோமதி கிருஷ்ணன் கவிதைகள்
- வேடதாரிகள்
- கே.கோவிந்தன் கவிதைகள்
- ஓவியம்
- முடிவுக்காலமே வைட்டமின்
- நொடிகள் கழிவுப் பொருள்களாய்
- வருகல் ஆறு
- கி. சீராளன் கவிதைகள்
- இப்போது உனக்காக…
- அன்புடன் இதயம் – 13 – நிலம்
- எனக்குள் எரியும் நெருப்பு.
- பால் கடன்
- இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:
- ப்ரான் கறி
- மீன் கட்லெட்டுகள்
- கடிதங்கள் ஏப்ரல் 1, 2004
- எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?
- A Bharata Natyam Dance Drama on Bharathi ‘s Works
- நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)
- Three exhillarting dance programs
- சாமியேய். ..
- ஹிண்டுவிற்கு தினந்தோறும் முட்டாள்கள் தினம்
- லென்னி புரூஸ் பொன்மொழிகள்
- கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
- தீக்குள் விரலை வைத்தால்.
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18
- ‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘
- பனியில் விழுந்த மனிதர்கள்
- நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)
- ‘பச்சை ‘ மணிக்கிளியே!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)
- புழுத் துளைகள் – 2
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13
- களிமேடு காளியம்மாள்
- இருபது/இருபது (தொடர்ச்சி…)
- வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி
- சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
- பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3
- சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்
- மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)
- ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்
- திரை விலகியது
- விலக்கப்பட்ட கனி
- எதிரேறும் மீன்கள்
- காலப்பிழை
- சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
- சோற்றுப் புத்தகம்
- நல்லாமல் நன்றியெது ?
- காவிரி மண் வாக்காளர்களே….!