சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
சத்தி சக்திதாசன்
கானம் பாடும் காலை
புதிதாய்ப் பிறந்தது இந்தக் காலை
புதிதாய் மலரும் பூக்களும்
ஆதவன் ஒளிமழை பொழிய இளங்குயில்
அழகாய்க் கவிபாட கலங்கிய வெண்திரை போலே
பனி படிந்த வண்ணம் உதித்ததிந்தக் காலையே.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும்
ஒவ்வொரு நிகழ்வின் ஆரம்பம்
நிகழ்வதந்தக் காலையிலே.
காலையின் வரவு
சிலருக்கு
கரும்பு
வேறு சிலருக்கோ
கசப்பு
வந்து முடிந்த காலைகள் எல்லாம்
வசந்தமாய் நினைவில் நிறைவதும் இல்லை
வாட்டி என்றும் வருத்துவதும் இல்லை
இரவின் வளர்ச்சியின் முதுமை
காலையா அன்றி
அழியும் இரவின் இறுதி மூச்சுத்தான்
காலையா ?
மறைந்த இரவின் ஏக்கங்களுக்கு
விடியும் காலை விளிக்குமா
விடைகளை ?
காலை இசைக்கும்
கானங்கள் பல
சொல்லும் சோகம் சில , தெளிக்கும் ஆனந்தம் சில
புதிதாய்த் பிறக்கும் காலையில் எம்
நெஞ்சத்தையும் திறந்து கொள்வோம்
அழியாக் காலம் தந்த கோலங்களை
அழகாய் வாரி எடுத்தே அனுபவ அறையினுள்
அடைத்து வைத்திடுவோம்.
ஏனெனில்
சில காலைகள் எமக்கு
கறுப்பாகவே இருக்கும்
அப்போதைய விடிவிற்கு
உதவும் வெளிச்சங்கள்
இவைதான்
காலையின்
களிப்புக்கள்
கணநேரம்தான் ஆனாலும்
கடந்தொரு காலை நாளை வரும்
கலங்காதீர்.
வாழ்வில்
வந்து போகும் காலைகள் ஆயிரம்
வாழ்வு நமக்கு முடிந்த பின்னும்
காலைகள் வரவைக்
கண்டு கொண்டேயிருக்கும்.
மலர்கள்
மகிழ்வது காலையில்
மணப்பது
மாலையில் அடுத்து வரும்
காலையின் கனவுகளோ ?
ஊமையின் கனவு
நாளைய உலகம் அங்கே
நட்பே மதம்
ஒற்றுமை வேதம்
ஒன்றே தேவன்
இது ஊமையின் கனவே !
வரனவன்
வரதட்சணை
வாங்க மறுத்து
வாழ்ந்து காட்டிய
வரலாறொன்று
இது ஊமையின் கனவே !
இருப்பதைப் பகிர்ந்து
இல்லாதவனுடனமர்ந்து
உண்பது என்பது அவர்கள்
உள்ளத்தின் கீதம்
இது ஊமையின் கனவே !
பிச்சைக்காரர்கள்
குற்றவாளிகள்
படங்களில் பட்டும்
பார்த்தது உண்டு
இது ஊமையின் கனவே !
ஊமையின் கனவு
உயிர்வாழ்வது
விழிகளில் தூக்கம்
மறைவது மட்டும்
***
sathnel.sakthithasan@bt.com
- முடிவுக்காலமே வைட்டமின்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3
- இருபது/இருபது (தொடர்ச்சி…)
- களிமேடு காளியம்மாள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13
- புழுத் துளைகள் – 2
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)
- ‘பச்சை ‘ மணிக்கிளியே!
- நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)
- பனியில் விழுந்த மனிதர்கள்
- ‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘
- கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
- சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்
- சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
- பால் கடன்
- சொல்லால் செத்த புறாக்கள்
- அன்புடன் இதயம் – 13 – நிலம்
- இப்போது உனக்காக…
- கி. சீராளன் கவிதைகள்
- வருகல் ஆறு
- நொடிகள் கழிவுப் பொருள்களாய்
- ஆதிமுதல்….
- திரை விலகியது
- ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்
- மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)
- வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி
- பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18
- எதிரேறும் மீன்கள்
- Three exhillarting dance programs
- நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)
- A Bharata Natyam Dance Drama on Bharathi ‘s Works
- எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?
- கடிதங்கள் ஏப்ரல் 1, 2004
- லென்னி புரூஸ் பொன்மொழிகள்
- ஹிண்டுவிற்கு தினந்தோறும் முட்டாள்கள் தினம்
- சாமியேய். ..
- இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:
- மீன் கட்லெட்டுகள்
- விலக்கப்பட்ட கனி
- காலப்பிழை
- ப்ரான் கறி
- ஓவியம்
- கே.கோவிந்தன் கவிதைகள்
- வேடதாரிகள்
- கோமதி கிருஷ்ணன் கவிதைகள்
- நழுவும் …
- மெளனம்
- எனக்குள் எரியும் நெருப்பு.
- காவிரி மண் வாக்காளர்களே….!
- நல்லாமல் நன்றியெது ?
- சோற்றுப் புத்தகம்
- சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
- தீக்குள் விரலை வைத்தால்.