சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
சுமதி ரூபன், கனடா
1
மீண்டும் பல இரவுகள் கழியும்
அதே உரசல்
அதே அணைப்பு
அதே விரக மூச்சு
உடல் கனக்க இறுகும் பிடி
விலகி
விறைத்து
விம்மி
எரிச்சலாய்
எனக்கான சினங்களுடன்
இறக்க வைப்பேன்
இன்றும் சில இரவுகளை
முடிவில்
எனக்கான சில கணங்கள்
நிமிடங்கள் நினைவில் வர
வார இறுதிக்கான
எனது களிப்புகளின்
அட்டவணை நீளமாய் ஊசலாட
விறைப்பு விலகும்
புன்னகை வந்தேறும்
உடைகளைத் தகர்த்தி
மீண்டும் நான் வேசியாவேன்
சுமதி ரூபன்
2
சமத்துவம் என்பாய் நீ
போரின் அடையாளங்கள்
எப்போதுமே
அங்கு காணப்பட்டதில்லை
மெல்லிய விசும்பல்களின் மோதல்கள்
சுவரோரங்களில் எதிரொலிக்கும்
கன்னங்களில் வடிந்து
காய்ந்து போயிந்தது
கண்ணீர் இல்லை
நிறம்பிய நித்திரைச்சுரப்பிகளின்
வெளித்தள்ளல்களே
என் சுயத்தை இழந்தாயிற்று
கோழை எனலாம் நீ
போரின் அடையாளங்கள் அற்ற
சுற்றமே சமத்துவம்
நான் இழந்தது
என்
சுயத்ததை
உரிமையை
சிரிப்பை
ஆசையை
அதிர்வுகள்
அலறல்கள்
இரத்தங்கள்
இறப்புக்கள் அற்ற
சுற்றம் வேண்டி
என்னை நான் இழந்தாயிற்று
கோழை எனலாம் நீ
பிரக்ஞை அற்று
சூரியனின் தோற்றமும் மறைவும்
நிகழ்ந்த படியே இருக்கும்
சுமதி ரூபன்
3
எனது வீட்டின் ஒரு மூலையிலாவது
“அதை” பொருத்தி வைப்பதற்கு
இடம் தேடியலைகின்றேன்.
எங்கும் ஆக்கிரமிப்பு அதிகமாகவே உள்ளது
“விட்டுத்தொலை போகட்டும் சனியன்” என்று பெற்றோரும்
“தூக்கிப்போடு யாருக்கு வேணும்” என்று கணவரும்
“அப்பாடா” என்று குழந்தைகளும்
அலுத்துக்கொண்டாயிற்று
கசங்கிப் பிளிந்து நைந்து போனதை
எதற்காக நான் கொண்டலைகிறேன் என்று
தெரியாமலேயே
நானும் அலைகின்றேன்
எப்போதாவது அதற்கான
ஒரு இடம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
***
சுமதி ரூபன்
கனடா
***
ssmith@ieccan.com
- ‘கவி ஓவியம் ‘
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- இந்தியா இருமுகிறது!
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- கனவான இனிமைகள்
- எதிர்ப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- ஆத்தி
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- கேண்மை
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- தேர்வு
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- ….நடமாடும் நிழல்கள்.
- மின்மீன்கள்
- கணக்கு
- அவளும்
- துளிகள்.
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)
- கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி
- Saiva Conference 2004 Youth Forum
- கருத்தரங்கம் – கவியோகி வேதம் அவர்களின் புத்தகம் பற்றி
- கடிதங்கள் மார்ச் 18 2004
- A Mighty Wind (2003)
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- யானை பிழைத்த வேல்
- வைரமுத்துவின் இதிகாசம்
- முற்றுப் பெறாத….
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- அந்தி மாலைப் போது
- ஏழாவது வார்டு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- நிஜக்கனவு
- நினைவின் கால்கள்
- மேகங்கள்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- வணக்கம்
- முரண்பாடுகள்
- நாற்சந்தியில் நாடகம்
- எங்கே போகிறேன் ?
- உயர்வு
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16