அம்மா தூங்க மறுக்கிறார்
புஷ்பா கிறிஸ்ரி
அம்மா தூங்க முயல்கிறார்.
கண்கள் தூங்க மறுக்கின்றன
இன்னும் பொழுது விடியவில்லைத் தான்
தூரத்துக் காரொன்று உறுமுகின்றது
இரவு வேலை முடித்த
அதிகாலை உழைப்பாளி போலும்
அம்மா திரும்பிப் படுக்கிறார்
பகல் முழுவதும் அலைந்து
வீட்டினுள்ளே நடந்த அலைச்சல்
உடல் முழுவதும் தெரிகிறது
இன்னும் கண்களில் தூக்கக் கலக்கம்
மூடமறுக்கும் இமைகள்
பொழுது புலர்ந்ததை சூரியன்
கிழக்கிலே உணர்த்துகிறது
இனியும் தூங்குவதில் அர்த்தமில்லை
வந்து கதவு தட்டும்
தன் பேரக் குழ்ந்தைகளை
ஏற்றுக் கொண்டு
தொழிலுக்குப் போகும்
தன் மக்களை வழுயனுப்பி
வைக்க வேண்டும்..
விடியா மூஞ்சியாய் படுக்கையில்
கிடப்பதில் யாருக்கு என்ன லாபாம் ?
நிரந்தர நோயுடன்
படுக்கையில் கிடக்கும் கணவனுக்கு
தேனீர் தர யார் வருவார் ?
தூக்கக் கலக்கத்தில் கிடக்கும்
மறு பிள்ளைகளை
தொலைபேசியில் அழைத்து
யார் எழுப்புவார்கள் ?
இந்தக் கட்டை உயிருடன்
இருக்கும் வரை
என் கடன் பணி செய்வதே!
கடமையைச் செய்தால்
பலன் தேடி வருமென்ற
முனகலுடன் மிகுந்த சிரமத்துடன்
கண்விழித்து எழுந்து தன்
கடமையைத் தொடர்கிறார்
75 வயது அம்மா
இனி இரவுத் தூக்கமா ?
இல்லை மறுநாள் இரவு…
அதுவும் ஏமாற்றினால்,
நித்தியத் தூக்கம் தானே நிரந்தரம்..
புஷ்பா கிறிஸ்ரி !
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
- ‘கவி ஓவியம் ‘
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- இந்தியா இருமுகிறது!
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- கனவான இனிமைகள்
- எதிர்ப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- ஆத்தி
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- கேண்மை
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- தேர்வு
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- ….நடமாடும் நிழல்கள்.
- மின்மீன்கள்
- கணக்கு
- அவளும்
- துளிகள்.
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)
- கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி
- Saiva Conference 2004 Youth Forum
- கருத்தரங்கம் – கவியோகி வேதம் அவர்களின் புத்தகம் பற்றி
- கடிதங்கள் மார்ச் 18 2004
- A Mighty Wind (2003)
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- யானை பிழைத்த வேல்
- வைரமுத்துவின் இதிகாசம்
- முற்றுப் பெறாத….
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- அந்தி மாலைப் போது
- ஏழாவது வார்டு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- நிஜக்கனவு
- நினைவின் கால்கள்
- மேகங்கள்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- வணக்கம்
- முரண்பாடுகள்
- நாற்சந்தியில் நாடகம்
- எங்கே போகிறேன் ?
- உயர்வு
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16