இரு கவிதைகள்

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

ஆ,முத்துராமலிங்கம்


மனச்சிறை

அந்த தெருவில்

எல்லோரும் அவசரமாக

சென்றுக் கொண்டிருந்தனர்

கால்களின் சப்தத்தில் அச்சம்

கொண்டிருந்த தெரு நாய்

ஒடிச் சென்று வளைவில்

மறைந்து காணாமல் போனது.

பாதியில் திரும்பிய ஒருத்தன்

எல்லோர் முகத்தையும் உற்றவாறு

வீடு வந்தான்.

பூட்டியிருந்த கதவை திறந்ததும்

சிறகை அடித்துக் கொண்டபடி

சிட்டுக் குருவியொன்று

பறந்து வெளியில் சென்றது.



சூன்யப்பிறவி

நீண்ட சிந்தனைக்குப் பின்னும்

ஒற்றை வார்த்தையும்

உருப்பெறாமல் உடைந்து

சிதறிக்கிடந்தது வார்த்தைகளனைத்தும்.

அறைமுழுதும் வியாபித்திருந்த

உன் பிம்பங்கள் நிலைகொள்ளாத

என்னங்களை காரணமற்ற திசையில்

குவித்துக் கலைத்துப் போட்டது.

நடுப்பகல் வெயிலில் புலுதிமண்ணில்

உருண்டு புரளும் கழுதையென மனம்

வெறுப்புற்று வெறுமையின் வனாந்திரதில்

தனித்துக் கிடந்தது.

பொறுமை இழந்த மின் விசிறி

விரித்து வைத்திருந்த வெற்றுக்

காகிதத்தை திரும்ப திரும்ப

கீழெறிந்தது.

பேனாவின் கூர் முனை

சொற்களை கொலை செய்து

குப்பையில் போட்டிருந்தது.

இருக்கை, விரல்கள், பார்வை

சுவாசம் எதுவும் என் வசம் தவறி

மண்டைகூடுடைத்து சில கொம்புகளும்

முதுகுத்தண்டின் கிளைந்தெழுந்த ஒற்றை

சிறகுமாய் என் இருப்பை சூன்யத்தின்

கோரக்கனங்கள் மாற்றியிருந்தது.

பற்கள் நீண்ட உன் நினைவுகள்

என் சுவாசத்தை நெறிக்கையில் அம்

மாய கனத்தின் விளங்குடைத்து

வெளிப்பட்ட நான் விரல்களை

என்னிபார்த்து விட்டு

சன்னல் அறுகில் வந்து வெளிபார்த்தேன்

சூடு குறைந்த அம்மாலை வெயில்

என் மெய்புலன்களை மீட்டுதந்தது

அருகில் நின்றிருந்த தென்னையில்

யாரையும் கவனிக்காமல்

கட்டுகளற்ற சுதந்திரத்துடன்

துள்ளி விளையாடிக்கொண்டிருந்ததன

இரு அனில்கள்.


Series Navigation

ஆ,முத்துராமலிங்கம்

ஆ,முத்துராமலிங்கம்

இரு கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

நிலாரசிகன்


1.செந்நிற கூந்தல்காரி

அவள் முகத்தில்
பூனையொன்றின் சாயல்
படர்ந்திருந்தது.
காற்றில் அசைகின்ற
செந்நிற கூந்தலும்
உற்று நோக்குகின்ற
நீல நிற கண்களும்
அவளுக்கு வாய்த்திருந்தன.
உதிரிந்துகிடக்கும்
செர்ரிப் பழங்களை
ஒவ்வொன்றாய் தேடிச்சென்று
மிதித்துக்கொண்டிருந்தவள்
சட்டென்று வான்நோக்கி
பார்த்து சிரித்தாள்.
பின்,
ஏதுமறியா சிறுமியாய்
புல்வெளியில் ஓடி விளையாடினாள்.
பாவம் பைத்தியமென்றார்கள்
பூங்காவிலிருந்தவர்கள்.
மெல்ல மெல்ல
தங்களது முகம்
வேட்டைநாயின் முகமென
மாறிக்கொண்டிருப்பதை அறியாமல்.


2.சிலையுலகம்

உறைந்த மெளனத்தை
உகுத்துக்கொண்டிருக்கும்
அந்தச் சிலையின்
மர்ம அழகிலிருந்து
எழும்பும் இசை
மனதின் ஆழத்தில்
ஒன்றன்மீது ஒன்றாய்
படிந்துகொண்டிருந்தது.

மெளனத்தின்
மென்கரம் பற்றி
சிலையுலகினுள் நுழைந்தேன்.
சப்தங்களால் நிறைந்திருந்த
அவ்வுலகை விட்டு
வெளிக்குதிக்க என்
கரம் பற்றும்
அவசரத்தில் வரிசையில்
நின்றன சிலைகள்.

-நிலாரசிகன்.

Series Navigation

நிலாரசிகன்

நிலாரசிகன்

இரு கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

றகுமான் ஏ. ஜெமில்



ஒரு ஊசித்தும்பியின் கேவல்

நரகல் கிளறும் இவ்வதிகாலை
கிளப்பாட்டும் கிழவன் கதையும் பயின்றபடியாக
மயிலிறகு குட்டிபோட்ட மாயத்தை
தோழியிடம் கூடிக்கூடி குசுகுசுத்து
தோப்புக் கறணம் வாங்கியபடியாக கிடந்திருப்பேன்
முன்பள்ளி வெளியில் சம்மாரமிட்டபடி

ஏன் மணல்வீட்டை சாித்து
நிர்வாணமாய் நின்றபடி மூத்திரம்பெய்து
யாதேனுமொரு நிழலசைவில் கீாிடும்
என் அல்லசல் குட்டிநட்டிகள்
பள்ளிக்கமர்த்தப்பட்ட சூாிய உதயத்தில்தான்
நானும் வலுக்கட்டாயமாக
வீட்டு வேலைக்கமர்த்தப்படலானேன்.

ஏன்னை ஆடு மாடுகள்மாதிாி
ஒரு அடிமையாக வித்துத்தொலைத்து
பட்டாம்பூச்சி பிடித்துவிளையாடும்
என் ஆசைகளை சொதப்பி
கனவுகளையும் செமித்தாயே!
அம்மா நீ மஹா கொடுரீதான்.

இந்தப் பளிங்கு மாளிகையின்
நாய்க்கும் பூனைக்குமான செல்லத்தில்
சொற்பமும் எனக்கு வாய்க்காமலாயிற்று
இருந்தும் இந்தப் பிராணிகளோடுதான்
ஏன் ஆறுதல்களும் முறைப்பாடுமாகும்.

ஏஜமானின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி
வாழ்தலின் அழகை ரசிக்கும்படியான
ஏன் சூாியன் அதோ அழுகிறது
தூக்கணம் குருவின் சிறகடிப்பிலிருந்தும்
சிலந்தியின் காலிடுக்கிலிருந்துமாக.


எனதின் பாடலும்
திராய்க்காற சிறுமியும்

மிக அதிகாலை மங்கலான வெளி
புழுப்பூச்சிகளற்ற தெரு
இரவின் அடைமழை கூதலில் கொடுகிக்கிடந்தது
ஏனதின் நாயும் பூனையும்
சற்று தொலைவில் ஆயதம் தாித்தபடியாக
நுகா;ந்தனர் சிலர் அடையாளம் காணமுடியாதபடி

வயற்காடுகளின் ஈரம் உலராத பிசுபிசுப்புகளோடு
சேறு நெடி அடிக்கும்படியாக
மிலாந்தினாள் சிறுமி
திராய் கத்தைகளோடு
மிகுதியாயும் ஒட்டிக்கிழங்கும் வைத்திருந்தாள்

அம்மாவை பறிகொடுத்து தவிக்கும்
தனித்த பறவையின் கேவலாக
சோகம் மிகுந்த பாடலாக கவிந்தது
அந்தப் பிஞ்சின் இரங்கல்
இன்னும் எல்லாவிதமுமான பிரக்ஞைகளும்
இழையோடிக்கிடந்தது அவள் முகத்தில்

ஒரு கலர் பெட்டிக்காக
அல்லது மிகவும் அவசியமென்றாகிய
ஏதேனும் ஒன்றுக்காக
இந்த திராய் கத்தைகளை
அவள் ஏந்தி வந்திருக்கக்கூடும்
அப்பாவின் பாடுகளை தணிக்கும்படியாக

இருந்தும் எனதின் உணர்வெல்லாம்
யாரேனும் ஒரு காட்டுமிராண்டி
தனித்த ஒரு சூழலில்
இந்தப் பட்டடாம் பூச்சியின் சிறகடிப்பை
நிர்மூலமாக்கிவிடலாமென்பதுபற்றியேதான்.

றகுமான் ஏ. ஜெமில், இலங்கை

Series Navigation

றகுமான் ஏ. ஜெமில்

றகுமான் ஏ. ஜெமில்

இரு கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

மு. பழனியப்பன்


விஷயம்

விஷயம் இல்லாதவர்கள் இல்லை,
விஷயம் தெரியாதவர்கள் உண்டு,

எழுதத் தெரிவது
படித்து நினைவில் இருத்துவது
கணக்கு போடுவது
வருமானவரிக்கு ஏற்ப சேமிப்பது

குறைந்த செலவில் அதிக வசதி
தேவைக்கு ஏற்ப மனிதர்களின் பழக்கம்
வேலையை முடிக்க குழைவு

இப்படிப் பலப்பல விஷயங்கள்
இதைத் தெரியாதவர்கள் இருக்கலாம்
ஆனால் விஷயம் இல்லாதவர் எவரும் இல்லை

புத்தித் தெளிவிலும்
புத்திக் கூர்மையிலும்
வேகம்
கூடலாம் குறையலாம்

விஷயம்
சொல்லித் தெரிகிற விஷயம் இல்லை
சொல்லாமல் அறியப்படுகிற விஷயமும் இல்லை
இரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருப்பது

இது இது விஷயம் எனத்
தெளிவு பிறக்காமலே
விஷயம் விஷயமாக இருக்கிறது

எனினும்
மனிதர்கள்
விஷயமாக இருக்கிறார்கள்



வில் + அங்கம் = வில்லங்கம்

வில்லங்கமான
ஆட்களைப் பற்றிய விபரக்குறிப்பு இது

இவர்கள்
அறிமுகமாகும் போது
மிக மென்மையானவர்களாகத் தோன்றக் கூடும்

விபரங்களைச் சேகரிப்பார்கள்

தேவையானவை
கிடைக்கும்வரை மெளனம்
இவர்களின் மொழியாகும்

பாரட்டுக்களை எதிர்பார்க்க முடியாது

தேவையானவை
கிடைக்காவிட்டால்
மென்மை வன்மையாகும்
விபரங்கள் விபரீதமாகும்
மெளனம் வெடித்துச் சிதறும்

ஒவ்வொருவருள்ளும் இவை
நிகழலாம்

ஏனென்றால் வில்லங்கம்
பழிவாங்கலின் தொடக்கம்

—-
muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்

இரு கவிதைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

மனஹரன் – மலேசியா


சுவர்க்கம்
மனஹரன் – மலேசியா

நான் வீணைதான்

நீ

மீட்டிய பிறகு

தெரிந்து கொண்டேன்

உனக்கு

விரல்களே இல்லை

—-

மீண்ட சொர்க்கம்
மனஹரன் – மலேசியா

இன்னும் வெளிச்சங்கட்டும் வாலிபத்தை

வீட்டுக்குள் முடக்க வைப்பது

நியாயம்தானா ?

இன்னும்

பச்சை படரும் பருவதற்கு

பாசாணம் வார்ப்பது

முறைதானா ?

சொல்

வெள்ளையடிக்கும் முன்னே

வெளுத்துவிட்டதாய்

வாழ்க்கையை விரட்டுவது

சரிதானா ?

நம்மில்

பலரின் படுக்கையறைகள்

சாந்தி முகூர்த்தத்திற்குப் பின்

வாசம் வீசுவதில்லை

கரை கண்ட கட்டிலும்

அமுங்கி கிடக்கும் மெத்தையும்

மருத்துவமனையையல்லவா

ஞாபகத்திற்குக் கொண்டுவரும்

மங்கையர் பலர்

மாதவிடாய் நின்றதும்

தாம்பத்தியம் அற்றுப்போனதாய்

கருதி முடிக்கின்றனர்

பெண் பிள்ளை

பெரியவள் ஆனதும்

படுக்கையில்

அவளுக்குத் துணைச்செல்லும்

தாய் மார்களே

அவளுக்கு கூட்டல் என்றால்

உங்களுக்கு கழித்தலா ?

விடுபடும் சொந்தத்திற்காகச்

சொர்க்கத்தின் பாதைகளை

ஓரங்கட்டி வைப்பதா ?

முதல் முத்தம்போல்

முனகலெல்லாம்

தினம் தினம்

காதுக்குள்

ரீங்காரமிட வேண்டும்

ஒவ்வொரு காலையும்

வெட்கத்துடன்

விடிய வேண்டும்

ரெட்டை நரை கண்டவுடன்

பூஜையறை கதவுகளை

திறந்துவிட்டு

வாழ்க்கையை மூடி விடாதீர்கள்

படுக்கையறையும்

வாசம் வீசட்டும்

நாளொரு பூஜையும்

பொழுதொரு விரதமும் எடுப்பது

எந்தத் தாகத்தைத்

தீர்ப்பதற்காக ?

தினம்

முத்தமிழைப்போல்

முப்பாலைப்போல்

மும்முறையாவது முத்தமிடுங்கள்

சொற்கள் முடமாகி

அதரங்கள் உரசட்டும்

வாழ்க்கையின் விரசம்

உயிர் பெறும்

இறுக்கம் பெருகும்

இடைவெளி

விவாகரத்துப் பெற்று ஓடும்

வயதாகிவிட்டதென்று

நினைத்துக் கொண்டிருக்கும்

மனைவி மார்களே

மார்க்கச்சை அளவுகளைக்

குறைத்துக்கொள்ளுங்கள்

வயது குறைந்து நிற்கும்

படுக்கையறையில்

போர்வை இரண்டுபட்டால்

இறுக்கம் விலகி நிற்கும்

பிரிவு பிரிவு கேட்கும்

வயதாகிவிட்டதென

முடிவு செய்து விட்டவர்களே

திருமண விழாவிற்கு

இருவரும் செல்லுங்கள்

சாவுக்குப்போவதை

நிறுத்துங்கள்

அந்த வருத்தமே

பாதி வாழ்க்கையை

மென்றுவிடும்

வயதாகிவிட்டால் என்ன ?

கைகோத்து நடங்கள்

உள்ளங்கை ஸ்பரிசம்

உள்ளத்தில்

மீண்டும் பரிசம் போடும்

இருவரும்

ஒன்றாக உணவருந்துங்கள்

இருவரும்

ஒன்றாக படுக்க செல்லுங்கள்

இடைவெளி குறைந்து

உயிர் பிரியும்

வாழ்க்கை வாழ்வதற்கே

அதில்

குறைப்பதற்கும் முடக்குவதற்கும்

நாம் யார் ?

—-

kabirani@tm.net

Series Navigation

மனஹரன் மலேசியா

மனஹரன் மலேசியா

இரு கவிதைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

ஸ்ரீராம்


யாரும் இல்லாத ரயில் வண்டியும்,யாரும் இல்லாத ரயில் நிலையமும்
—-

அழகிய வேலைப் பாடுள்ள
ஆளுயர கண்ணாடி சீசாவை
ஒற்றை கயிறு பாலத்தில்
தூக்கிக் கொண்டு நடந்து
பத்திரமாக சேர்த்த நேரத்தில்
ரயில் வண்டி நினைவிற்கு வருகிறது..!
தேடி தேடி பெற்றவற்றை
இந்த ஊரிலேயே இறக்கி வைத்து..
தேடலின் உச்சத்தில்
காத்திருப்பதை காதலிக்க
தயாராகிறேன்..!
ரயில் நிலையத்திற்கு எவரையும்
வழியனுப்ப வர வேண்டாம்
என்று சொன்ன பிறகு
ரயில் நிலையத்தில் இப்போது..!
இருள் கவிழ்ந்த
கரிய இருளில் காத்து இருக்கிறேன்!
பயணத்திற்கு எதுவும் எடுத்து செல்லாமல்
அன்பையும் கருணையையும் ஏந்தி
என்னை ராஜனாக அழைத்து செல்ல
யாரும் இல்லாத ரயில் வண்டி
யாரும் இல்லாத ரயில் நிலையம்
வந்து சேரும்…


அவன் அழகன்!
—-

நான் சென்றபின்னர்தான்
அவன்
வந்து அமர்ந்து கொள்கிறான்!

நான் இருக்கும்வரை அவன்
வரப்போவதில்லை….!
நான் போக ஆரம்பித்தேன்…!
புள்ளியாய் போகும் அளவு…!
புள்ளியும் மறைந்து கரைந்து
போகும் மட்டும்…!
அங்கு
பேசாத வேர்களும்
பேசுகிற செடியில்
அமைதி பூக்களும்!
பால் பருகும் தன் கன்றை
நாவால் வருடும் தாய் பசு..!
பெரிய பெரிய
இறுகிய மலைகளின் மேலே
லேசான சுதந்திர மேகங்கள்!
வன்மையாய் மிதித்தும்
மென்மையாய் முத்தம் இடும் புற்கள்…!
பூவோடு பூவாக
அமைதியாய் அமர்ந்த போது
அவன்தான் வந்திருக்கிறான்…
அழகனாய்.


sriram_nagas@yahoo.com

Series Navigation

ஸ்ரீராம்

ஸ்ரீராம்

இரு கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

சீனிவாசன் ராமச்சந்திரன்


தேடல்

இருண்டு கிடக்கும்
பனிப் பிரதேசங்கள்,
சருகுகள் சரசரக்கும்
நெடுமரங்கள் இடை பாதை,
புவியீர்ப்பு விசை
பொய்த்துப் போகும் உயரங்கள்,
குளிர் போர்வையால் தழுவும்
ஆழ்கடல் பிரதேசங்கள்,
வெய்யிலின் வெம்மையில்
வாய் பிளந்த வரண்ட பூமி
என
கல்லூரி காலங்கள்,
வீணில் பொழுதுகள்,
கோடை காலங்கள்,
குளிர் காலங்கள்,
இதுபோல் இன்னும்
பற்பல காலங்களில்,
பற்பல நேரங்களில்,
தேடி தேடி,
உணர்வுகள் உலர்ந்து,
நினைவுகள் கடந்து,
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான உன்னை.
—-
சாம்பல்

எங்கு நோக்கினும்
பாய்வதற்கு தயாராய்
வார்த்தை குத்தீட்டிகளின் கூர்முனைகள்.
அவமான ரத்தம்
ஓடச்செய்யும் சொல் அரிவாள்கள்.
சுவாசத்தைக்கூட
பிடுங்கிக் கொள்ளூம்
அவமரியாதை செயல் ஆயுதங்கள்.
எதற்காய் இத்தனை மூர்க்கம் ?
எதற்காய் இத்தனை கேடயங்கள் ?
எதற்காய் இத்தனை வேலிகள் ?
சுவாசித்தால் ரத்தம் வரும்
அளவிற்கு
காற்று மண்டலத்தில் இன்று
கலக்கப்பட்டிருக்கும் பொறாமை புகை.
புதைந்தும், எரிந்தும்
புழுதி கூட மிஞ்சாத நிலையில்
எஞ்சி இருப்பது
சில மண்டை ஓடுகள் மட்டும்..
—-
Srinivasan.Ramachandran@in.efunds.com

Series Navigation

சீனிவாசன் ராமச்சந்திரன்

சீனிவாசன் ராமச்சந்திரன்

இரு கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

எஸ். ரமேஷ்


மெல்லத் தொடரும் மணியோசை
காலத்தை உடைத்து கனியுண்டு
ஒளி மழையில் சிறகு உலர்த்தி
அன்பை அருந்திக் களிப்பாறும்
சிறு பறவை தன் கூடு விட்டு
மெல்லப் பரவும் மணியோசை
விசும்பின் வரையறை உள்ளொடுங்க
மீராவைத் தேடிய கானம் வீடடையும்.

% % % %

பெரிசுகளுடன் பிரச்சனையில்லை என்றும்
வீசிப்போட வார்த்தைகளுண்டு
தர்க்கச் சகதியில் தள்ளி விட்டு
தத்துவச்சாரலில் தலை முழுகி
தாண்டிப் போவேன் எப்போதைக்குமாக
பொடிசுகளுடன் போராட முடியவில்லை என்னால்
கும்பி நிறைக்க குருமா கோழி
அம்பி அருகே நின்று கேட்பான்
அப்பா நம் செல்லக் கோழி ஆனதென்ன யிப்படி ?
அதன் அப்பா அம்மா தேடாதா அதை தினப்படி ?
வலிமையான உண்மைகளை
எளிமையான வார்த்தைகளால்
எதிர்கொள்ள நேரிட்டால்
அதிராமல் இருப்பதெப்படி ?

% % % %

subramesh@hotmail.co

Series Navigation

எஸ் ரமேஷ்

எஸ் ரமேஷ்