பிறிதொரு நாள்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

பா.சத்தியமோகன்


அவளுடைய சொல் பறவை
எனது சொல் அம்பினில்
சிக்கிக் கொண்டு ரத்தம் வடிக்கின்றது.
செயல்களின் பாறாங்கல்லை
இயலாமையின் முதுகினால்
சுமக்கும் எனது நிலையோ சீறிச்சீறி ஓய்கிறது.
பிறிதொரு நாள் வருந்தக்கூடும்
காயப்படுத்தப்பட்ட அவளது பறவை
மெல்ல எழுந்து
தனிமையில்
முதுமையில்
எனது கண் கொத்தும் என்பதில்.
————————————————————

cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்