மரணம்
காளிதாஸ்
மரணத்துக்கு
என்னிடம் பசியில்லை
மரணம் மீதோ
அடங்காப் பசியெனக்கு
ருசியில்லாப்
பண்டம் என்னை
மரணம் மறுதளிக்கிறது
தெருத்
தெருவாய் அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனம்
நான்
உயர உயரப் பறந்தாலும்
உறையும்
கூடில்லாப் பறவை
மென்று மென்று
தின்று பார்த்துப்
பாதியில் மீதியைத்
துப்பிவிட்டுப்
பறந்துபோயிற்று மரணம்
மிச்ச எலும்புகளைப்
பொறுக்கிப்
புதைத்துப் பார்த்தேன்
கிழிந்த
தசைத் தொங்கல்களை
நெருப்புக் கூட்டி
எரித்துப் பார்த்தேன்
விடைதரா
விருந்தாளியாய்
வேதனை மட்டுமே
புண்ணிய உடல்தேடி
எங்கோ பாவம்
அலைந்துகொண்டிருக்கும்
மரணம்
– kaalidas2003@yahoo.com
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- இது என் நிழலே அல்ல!
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- பழையபடி நடந்திடுவேன்..
- விடியும்!- நாவல்- (34)
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- மீண்டும் சந்திப்போம்
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- காதலுக்கு என்ன விலை ?
- நானோ
- நேற்றின் சேகரம்
- உருகி வழிகிறது உயிர்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- கவிதைகள்
- எம காதகா.. காதலா!
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- மா ‘வடு ‘
- மீண்டும்
- ஏழையின் ஓலம்
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- பிறிதொரு நாள்
- பிரியம்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு