செங்காளி
சிங்கை வலசென்னும் சின்னஞ்சிறு கிராமமது.
அங்கிருந்த பழையவொரு ஆலயத்தின் கதையேவிது.
பலநூறு ஆண்டுகளைப் பார்த்துவிட்ட கோவிலது.
தளம்பெயர்ந்து சுவரிடிந்து தடுமாறி நின்றதது.
கோவிலின் நிலைகண்ட கிராமத்துப் பெரியோர்கள்
கூவியழைத்து மக்களைத்தான் கூட்டமொன்று போட்டனரே.
தக்கபடி கோவிலொன்றைத் தரமாகக் கட்டிடவே
அக்கனமே வேலைகளை ஆரம்பிக் கவேண்டுமென்று,
அனைவருமே ஒன்றுசேர்ந்து அமைத்தனரே ஒருகுழுவை.
இணைந்து செயல்படவே இசைந்திட்ட உறுப்பினர்கள்,
எவ்வாறு கட்டுவது எங்கேதான் கட்டுவது
எவ்வளவு செலவாகும் என்றெல்லாம் ஆராய்ந்து
மணிக்கணக்கில் பேசிவிட்டு மாறுதல்கள் பலசெய்து
மணியான திட்டமொன்றை மக்கள்முன் வைத்தனரே.
‘நன்றாக கேட்டிடுவீர் நாங்கள் சொல்வதைத்தான்
மூன்று காரியங்கள் முக்கியமாய்ச் செய்யவேண்டும்,
இப்போது கோவில்தான் இருக்கும் இடத்திலேயே
தப்பாது புதியதொன்றைத் திடமாகக் கட்டவேண்டும்.
பழையதின் கற்களையே பிரித்தெடுத்துச் செலவின்றிப்
புதியதைக் கட்டிடவே பயன்படுத்த வேண்டும்நாம்.
கோவிலைக்கட் டிமுடித்து குடமுழுக்கு நடத்தும்வரை
அதிகாலைப் பூசைமுதல் அந்திவேலைப் பூசையெல்லாம்
பழையதிலே தொடர்ந்து பாங்குடனே நடத்தவேண்டும்,
பிழையில்லைத் திட்டத்தில் புரிந்துகொள்வீர் ‘ என்றனரே.
—————————————————————————–
natesasabapathy@yahoo.com
- உடலில் மாற்றம்.
- ஆனந்த ‘வாசன் ‘
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- சாத்திரமேதுக்கடி ?
- பூமத்திய ரேகை
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- தேசபக்தியின் தேவை
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- பின் விளைவு
- அங்கீகாரம்
- உண்மை ஆன்மீகம்
- கவிதை
- குறியும் குறியீடும்
- காதலுக்கோர் தினமாம்
- உன்பெயர் உச்சரித்து
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- காதலர் தினக்கும்மி
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- கவிதைகள்
- நான் கேட்ட வரம்
- ஈடன் முதல் மனிதம்
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- புதிய சாதிகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- விடியும் -நாவல்- (35)
- இரு கதைகள்
- துகில்
- தேடல்
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- கண்ணா நீ எங்கே
- முதலா முடிவா ?
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- ஒரு கவிதை
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘