மூன்று
அனந்த்
முக்கட் பெருமானின் மூத்த புதல்வனே
முக்கனி கையமர்ந்த மும்மதத்தோய் – முக்காலம்
முத்தமிழில் மூழ்கியிவண் மூவகைப்பா ஆற்றுதிறன்
இத்தமியன் எய்தஅருள் தா
மூன்றில் ஒருவன்நால் வேதம் முழுதும் மொழிந்ததனால்
நான்கின் உயர்ந்தது மூன்றென நானிலம் நன்கறியும்!
மூன்று விதஒலி மோத விளையும்ஓம் மூவுலகும்
தோன்றி இருந்துபின் ஓய்ந்திடும் என்பதைச் சொல்லிடுமே
மூன்றின் பெருமை மொழிந்திடுதல் – அந்த
….. மூவர்க்(கு) ஏலா(து) ஏனெனில்அம்
மூன்று விளைந்த முறையினையே – யாரே
….. முற்றும் உணர்தல் சாத்தியமாம் ?
ஆன்றோர் அறிந்து பகர்ந்ததனால் – மூன்றின்
…. ஆழம் தெரிதல் ஆகு(ம்)முன்னம்
தோன்றிய ஒன்று ‘பிரமம் ‘அது – ‘மாயை ‘
…. சூழ்ந்(து)அ(து) ஆனது ‘சீவ ‘னென.
ஒன்றுமற் றொன்றோ டிணைந்துபெறும் ஒன்றினால்
என்றும் பெருகின்ற இன்பம்தான் – இன்றேல்இங்(கு)
இல்லறம் எங்ஙன் இயங்கும் எனவேமூன்(று)
இல்லையேல் இல்லை எழில்.
ஆற்றல் பொருள்நல் அறிவென மூவகைத் தாகஅன்னை
தோற்றம் எடுத்துநம் துன்பம் அகற்றிநாம் தோல்விகிட்டா(து)
ஏற்றம் அடைந்(து)அறம் இன்பம் பொருளிவை எய்தியொளி
நாற்றம் சுவைமூன்றும் நாமுறு மாறவள் நல்கினளே
வள்ளுவன் கம்பன் பாரதியும் – தம்
வாக்கிலிம் மூன்றை வடித்துளர்காண்
அள்ளிடக் குறையா அமுதமென – தமிழ்
அளித்தஇம் மூன்று கவிமணிகள்
உள்ளம்சொல் செய்கை மூன்றினையும் – நாம்
உயர்த்திடும் வகையில் பாட்டிசைத்தார்
கள்ளமும் தவிர்க்கக் காந்திமகான் – வாழ்ந்து
காட்டிய வழியும் இதுஅல்லவோ ?
முதலும் நடுவும் முடிவுமென மூன்றும்
எதிலும் இருத்தல் இயல்பே – அதனால்
முயலும் பணிகளை மும்முறை செய்தால்
பயன்திண்ணம் என்றிடுவார் பார்
அறிவியல் துறையில் வல்லுநர்கள் – கண்ட
…. அற்புதம் ஆங்கோர் அணுஉடைந்து
தெறித்திடும் மூன்றில் நடுத்துகளில் – ஒரு
…. துருவமில் லைஇ(து) அறிந்துநம்முள்
உறைத்திடும் எதிர்மா(று) உணர்ச்சிகளால்- உளம்
…. ஓயவொட் டாமல் பகைமையினை
அறுத்திடும் நல்ல நடுநிலையில் – நின்று
…. ஆற்றிடு வோம்நம் கடமையையே!
(வே.ச. அனந்தநாராயணன்)
—————————————————————-
ananth@mcmaster.ca
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)
- ‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது
- மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்
- ஒளிரும் காரிருள்
- நேற்று, இன்று, நாளை
- பொங்கலைத் தேடி…
- தமிழ் ஒழிக!
- அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு
- வாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது
- கடிதங்கள் – ஜனவரி 8,2004
- சில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்
- பொங்கலோ பொங்கல்
- உலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்! (டிசம்பர் 2003)
- கிறிஸ்மஸ் விடுமுறை
- நீ வருவாயா ?
- வாருங்கள்
- நீ ஏன்…
- விடியும்! -நாவல்- (30)
- அன்புடன் இதயம் – 2
- மின்சாரமில்லா இரவு
- அஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)
- பின்னல்
- இந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்
- நாடகமேடை
- மின் ஆளுகை (E-Governance)
- பெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.
- கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை
- எனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் ? ‘
- வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
- மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.
- அவதூறுகள் தொடாத இடம்
- பாரதி இலக்கியச் சங்கம்-சிவகாசி
- முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி
- நீலக்கடல் – அத்தியாயம் 1
- ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)
- எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்
- புரியாத புதிது
- பரவச கவிதைகள் சில
- நிழல்கள்
- தி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…
- வானவில்
- கவிதைகள்
- மூன்று
- இரவின் அழகு
- வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘
- கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்
- நீளப் போகும் பாதைகள்
- தேவதேவனின் மூன்று கவிதைகள்
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]