கவிதைகள்
மோனிகா
இனி சிட்டுக்குருவிகளிிடமிருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை
என் முன்னே ..
சன்னலின் வழியே சின்னக்குருவிதட்ட
சுக்குநூராய் போன கண்ணாடியூடே
நான் என்று உணர்ந்த நான்
நானாகிப்போன நான்
என் முகவெட்டும் புகைப்படமும்
என் கொங்கைகளும் தாய்மைப்பசியும்
மனவெளியும் ஒவியமும்
இன்னும் பலவும்.
பிணி கொண்டலையும் புலியைப்போல
அனுபவம் மதர்த்த தனிமைதேடலில்
நான் பெரிய மிகப்பெரிய
போரில் புஜம் தட்டும் பகவானேபோல
என் முன்னே..
மரமாய், கிளையாய், மதில் சுவராய்,
கற்றூணாய், காகிதமாய்
எனக்குவெளியே
எதிரொலி மறுத்த நிஜமாய் ..
பறந்து சென்ற குருவி அற்ியாத ரகசியமாய்.
சொல்லின் பொருளுக்கப்பால்
செயலாய் சுயமுற்றெழுந்த நான்
இனி சிட்டுக்குருவிகளிடமிருந்து
கற்பதற்கொன்றுமில்லை.
-மோனிகா
வாமனப்பிரஸ்த்தம்
அப்பாவுக்கு போன்சாய்களைப்
பிடிக்காது.
அம்மாவின் பிறந்தகத்தை
குந்தகம் சொல்வார்.
ஓவியம் தெரிந்தும் அம்மா
வரைய மட்டாள்.
பாடத்தெரிந்தும் லவகுசா
மட்டுமே பாடி கண்ணீர் துளிர்ப்பாள்
அம்மாவின் செருப்பு எப்போதும்
குழந்தைகளின் அளவுகள் நடுவே.
நாற்பது வயதில் நடு வீட்டில்
கோலி விளையாடும் குழந்தையானாள்.
வாமனப்பிரஸ்த்தமாம் போன்ஸாய்கள்.
அப்பாவுக்கு போன்ஸாய்கள்
பிடிக்காது.
-மோனிகா
காதல் கொண்டு செல்
களம் பெரிது.
கையகப்பட்ட வாழ்க்கையும் அதுவே.
நிலவு, நித்திரை, நேற்றிரவு கண்ட
மொட்டை மாடியென
நினைவு பொய்யில்லை.
நெருஞ்சியென நீர்க்கோர்த்துப்
பருத்துக் கிடக்கும்
கனவும் அப்படித்தான்.
நினைவுகள் கனவுண்டு
நகருகையில் நீண்டு நீண்டு
நெருங்க முடியாமல் ஒடும்
நாட்குறிப்பு.
குறிக்க நாளா இல்லை
கொண்டா கொண்டாவென
களம் வெரியும் காற்றேபோல்.
நினைவுகள் பெரிதாகிப்
பின் நாட்குறிப்பை
கிழித்துக்கொண்டு கொட்டும்.
வருகின்ற நாட்கள் முட்டித்தலை சாய்க்க
கடந்ததன் நகமாய் காலம்
பிடித்துந்த, கழிவிரக்கம்
கொண்டு சொல்லும்
காதல் கொண்டு செல் என.
-மோனிகா
அழகிகள் உறங்கும் நகரம்
இரவு நேரத்தில் ஒலி எழுப்புவதாய்
தோன்றிற்று இந்த அலமாரி.
கட்டிவைக்கப்பட்ட உலகங்களாய்
தோன்றின புத்தகங்கள்.
சொல்லும் கருத்தும் தாண்டி
வடிவுற்று வியாபித்த செவ்வகங்கள்.
புதியன கொண்ட வாசனை,
பழையன கொண்ட பூச்சி வாசம்,
அட்டை கிழிந்து தொங்கும் அழகு,
நூலகத்திலிருந்து தப்பி வந்தவை,
நண்பர்கலிடம் திருப்பித்தராதவை
என
நித்திரை கொள்ளுமுன் பார்த்தேன்
எனது அலமாரி,
அழகிகள் உறங்கும் நகரம் என.
-மோனிகா
பாலத்தின் கீழ் நிற்கும் ஒற்றை மரம்
இப்படியே நின்றது அன்றும்
இரவிரவாய் காயும் நிலவு
ந்ிற்காமல் ஒடும் நீர்நிலையென.
இன்று காணக்கிடக்கிறது
மணற்படுகை.
நடுவிலுள்ள பாலம்.
பாலம் சுமக்கும் மக்கள்
மணற்கடலில் நிலாச்சோறுண்டு
மரத்து உச்சி நிலவில் காதல் பேச
பாலம் கனவு மரம் உண்மை.
ஒற்றை மரக் கிழிக்குஞ்சு
உயரப் பறக்கும் கனவுகள்
உரக்கக்கத்தியும் தொலைவுகளில் மணல்வெளி.
ஒற்றை மரமும் கனவு
மணல்வெளிபோல்.
-மோனிகா
மெளனம் – சாத்தியம்
வெற்றுத்தாளென ஒரு
ஒற்றைத்தாளை
பார்க்கையில் விளையும்
சந்தோசம் ஏன்
ஒரு வெற்று நாளின்
வெறுமையை கவலைக்கிடமாக்குகிறது.
பொருளற்ற அறையின்
எதிரொலிச் சாத்தியம்
மனதிற்கும் வாய்க்கையில்
மெளனம்தான் அரவம்.
புற்றின் வெறுமை – காற்றோட்டம்
புதிய பரிணாமம் – வளர்ச்சி.
வெற்றுத்தாளின் முன் மட்டுமே
எண்ணற்ற சாத்தியம்.
-மோனிகா.
—————————————
monikhaa@hotmail.com
- விடாது கருப்பு
- விடியும்!-நாவல் – (27)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு
- வாசகர்கள் கவனத்திற்கு
- விமோசனம்
- நான் கணேசனில்லை…
- ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல
- விலங்குப் பலி x ஐீவகாருண்யம்
- வாரபலன் – குறும்பட யோகம்
- கடிதங்கள் – டிசம்பர் 18, 2003
- தொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து
- அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)
- எளிதாய்
- நிறக்குருடுகள்
- கவிதைகள்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)
- எத்தனை காலமாய்…
- எனக்கு வேண்டும் வரம்
- திரை அரங்கில்
- புரிந்ததா
- நன்றி
- ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]
- ஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:
- எனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘
- அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்
- எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.
- நகைச்சுவைத் துணுக்குகள்
- சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கப் படுகிறது.
- சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கும் விழா
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மொரிஸ் ப்லான்ஷொ (Maurice Blanchot – 1907 -2003)
- வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும்: அலன் ஸாக்கலுடன் ஷூலியன் பாக்கினி : உரையாடல் மொழியாக்கம்
- அலன் ஸாக்கலுடன் -ஜ_லியன் பாக்கினி உரையாடல் :வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும் :தமிழ் பின்நவீனத்துவம் குறித்த சில குறிப்புகளுடன்
- கனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை
- ஒரே வரி
- வாசகர்கள் ,படைப்பாளிகள் கவனத்துக்கு
- குறும்பாக்கள்
- பால்யம்.
- நீயே உனக்கு சாட்சியாளன்!
- சங்கம் சரணம் கச்சாமி
- சூட்சுமம்
- செம்பருத்தி
- முன்னோடி
- கை நழுவின பகலிரவுகள்
- புரியாமல் கொஞ்சம்…