குறும்பு

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

நம்பி


———–

எல்லா வீட்டுக் கூரையிலும்
வேப்பிலையை விடிவதற்குள்
செருகிவிட்டு
தெருவே ‘கொல் ‘லென்று
காலையில் ஆனபோது
ஊமையாய் சிரித்தது.

ஆரியபவன் கைகாட்டியை
கல்லூரி காண்டினுக்கு
திருப்பிவிட்டு
புதுப் பெற்றோர் திண்டாடியதை
தூரத்திலிருந்து ரசித்தது.

‘do not disturb ‘ எனத் தொங்கும்
ஹோட்டல் அறைக் கதவை
‘please make up room ‘ என
மாற்றிவிட்டு போவது

குற்றமில்லா குறும்புகள்
தொடர்கின்றன…
எங்கிருந்தாலும்.

———————–
nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி