நான்

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

ப.மதியழகன்


பறவைகள்
பாடுகின்றன
குதிரைகள்
கனைக்கின்றன
யானைகள்
பிளீறிடுகின்றன
நாய்கள்
குரைக்கின்றன
குழந்தைகள்
மழலை பேசுகின்றன
எவற்றையும் செய்ய
தடையெதுவுமில்லை அதனுலகில்
எல்லாவற்றுக்கும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது
இவ்வுலகில்
சுவர்கள் சிறையாகிப்போனதால்
நான் கைதியானேன்
ஏற்கனவே எழுதப்பட்ட
தீர்ப்புகளுக்கு
என்னையும் இரையாக்குவார்கள்
இவ்வுலகத்தினர்
பலிபீடமான இவ்வையகத்தில்,
சுற்றித்திரியும்
மந்தையாடுகளாய் நாம்.

,

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்

நான்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

கண்டனூர் சசிக்குமார்



நான் நானாக இருந்தபோது
நலமாகவும் இருந்தேன்

என்வீட்டு மாங்காயை
எவனையோ பறிக்கவிட்டு
அடுத்தவீட்டு மாங்காயை – நான்
பறித்து அடிவாங்கி…….

அப்போதும்

இன்னும்பிற வெளியில்
வெக்கக் கேடுகள்
சொல்ல முடியா
நடந்த போதும்…….

நான் நானாக இருந்தேன்
நலமாகவும் இருந்தேன்

பிறகெப்போது

என்வீட்டுக் கண்ணாடி- எப்போது
என்னை அழகாகக்
காட்டியதோ அப்போது

நான் நானாகவும் இல்லை……!!!!
நலமாகவும் இல்லை……….!!!!


ஆக்கம்: கண்டனூர் சசிக்குமார்
pabsh123@yahoo.com

Series Navigation

கண்டனூர் சசிக்குமார்

கண்டனூர் சசிக்குமார்

நான்…….?

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

ஆதிராஜ்


சல்லடை சொன்னது “நான்
சலிப்பதனால் மக்கள்
சாப்பிடுகின்றனர்!”

‘பொ’க்கெனச் சிரித்தது முறம்! “நான்
புடைத்தபின் தானே?
பொங்குது சோறு?”

“அற்பரே எங்களை
அறியீரோ” என
ஆர்ப்பரித்தது நெருப்பு!
அடுப்பும் அதையே
ஆமோதித்தது!

பூமி மௌனமாய்ப்ப்
புன்னகை செய்தது!
பசியோ ம¨றைவாய்ப்
பணியைத் தொடர்ந்தது!

– ஆதிராஜ்

Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்

நான்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

நெப்போலியன் சிங்கப்பூர்


நான்
நான் என்றால்
நான் இல்லை…

நானே
நானென்றால்
நானில்லை…

நான்
நான் ஆக
நான் துறந்து…

நான் அற்ற
நானில்
நான் ஆவேன் .

**
நெப்போலியன் சிங்கப்பூர்
**
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்

நான்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

வேதா மஹாலக்ஷ்மி


உன் ஒவ்வொரு அசைவிலும்
எனக்குள் ஓராயிரம் மவுனங்கள்…
ஒவ்வொரு மவுனத்திலும்
உறங்காத மன அலைகள்….
உண்மை பிரித்தெடுக்கும்
உலகிற்குப் புரிந்ததும், உனக்குப் புரிந்ததுமாய்!
அழகிலும் ஆற்றாமையிலும்
உன் அன்பு மட்டுமே அச்சாணியாய்!
ஏங்கலும் தேம்பலும்
எதையுமே செய்வதறியா
ஏமாற்றம் பல சமயம்!
கடல்போல் உணர்வுகள்…
நதியென நனைய விரும்பி
எனக்கே எனக்கான உன் பாசமழையின்
ஒவ்வொரு துளியையும்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
எங்கெங்கோ தொலைந்தபடி நான்!

***
piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலக்ஷ்மி

வேதா மஹாலக்ஷ்மி

நான்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

வேதா மஹாலக்ஷ்மி


உன் ஒவ்வொரு அசைவிலும்
எனக்குள் ஓராயிரம் மவுனங்கள்…
ஒவ்வொரு மவுனத்திலும்
உறங்காத மன அலைகள்….
உண்மை பிரித்தெடுக்கும்
உலகிற்குப் புரிந்ததும், உனக்குப் புரிந்ததுமாய்!
அழகிலும் ஆற்றாமையிலும்
உன் அன்பு மட்டுமே அச்சாணியாய்!
ஏங்கலும் தேம்பலும்
எதையுமே செய்வதறியா
ஏமாற்றம் பல சமயம்!
கடல்போல் உணர்வுகள்…
நதியென நனைய விரும்பி
எனக்கே எனக்கான உன் பாசமழையின்
ஒவ்வொரு துளியையும்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
எங்கெங்கோ தொலைந்தபடி நான்!

***
piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலக்ஷ்மி

வேதா மஹாலக்ஷ்மி

நான்

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

அனந்த்


‘பஞ்சபூதங்களால் ஆன
இவ்வுலகில்
உன் உடல்
அன்னமயம் ஆனது ‘ என்று
அறைகூவும்
உபநிஷத்துகள்.

ஆம்,
நான் உணவாகவே
உள்ளவன்

வானிலிருந்து வீழும் மழையால்
விளைந்த பயிரால்
விளைந்தவனே நான்

என் எழிலும்
குணமும், மணமும்
எல்லாமே தந்தவன்
நீ

நீ நானாகலாம்
ஆனால்…
நான் நான்மட்டும் தான்

உனக்கு என்னைப்
படைப்பதில் தான்
என் நிறைவைக் காண்பேன்.

—அனந்த்

(இது ஒரு வடஇந்திய உணவகத்தில் நானை உண்ணும்போது எழுந்த உணர்ச்சிக் கவிதை!:)

Series Navigation

அனந்த்

அனந்த்