குனிந்த மலை

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

கவியோகி வேதம்


**************
மலையா ? குனிவதுவா ?மண்டையைக் குடையுதய்யா!!

தலைப்புமிகக் கிண்டல்தான்! ‘-என்றாநீர் சாற்றுகின்றீர் ?

..

ஆம்,ஆம்! உற்று,ந ீர் அழகாகப் பாருங்கள்!

வாமனன்போல், அந்(த)அனும விஸ்வ ரூபன்போல்,

..

மரங்கள்,செடிகொடிகள் வளர்ந்தடர்ந்த மலையைநீர்

சரிவில்நின்று, பார்த்துவிட்டால் சட்டெனப் புரிந்துகொள்வீர்;

..

கவியின் ‘கண் ‘ உமக்குண்டா ? கட்டாயம் ரசிப்பீர்நீர்!

புவிநோக்கி மலைகுனியும்! புலனெங்கும் புல்லரிக்கும்!

..

எத்தனைப் பேரழகன்! எத்தனைப் பேரறிஞன்!

எத்தனைப் பெரும்வீரன்! இவ் ‘இராமன் ‘ ? இவனின்முன்

..

எதிர்த்துநின்று எவரேனும் இவ்வுலகில் ஜயித்தாரா ?

மதியிழந்தே கைகேயி ‘மன்னன் ‘இனி நீயில்லை;

..

காட்டுக்குப் போவென்று கட்டளைதான்;தந்தைசொன்னார்!

மாட்டு,மர வுரி ‘என்றே மனம்நையச் சொன்னபோது,

.

அந்த ‘ராம ‘ ‘மாமலை ‘தான், அழகாய்க் குனியலையா ?

வந்ததா சினம்மலைக்கு ? திமிரோடு நிமிர்ந்ததுவா ?

..

உயர்ந்தாலும், பெரும்மலைகள் உயர்ந்தோர்முன் குனிந்ததுண்டே!

அயராத ‘திமிர் ‘மலையும் அனுமன்முன் பணிந்ததுண்டே!

. …*****…

எவ்வளவு பேரழகு ? எவ்வளவு திண்கற்பு!

‘சிவ் ‘வென்று ‘ஓர் ‘சொல்லால் இலங்கையைச் சுட்டிடாமல்,

..

பவ்வியமாய்ச் சீதை-மலை ‘அசோக ‘த்தில் அமரலையா ?

செவ்வையுற அனுமனுமே சேவைபல செய்தபின்னே,

..

அந்தபெரும் ‘சீதை-மலை ‘ அனுமனை நோக்கிநின்று,

‘இந்தஉயர் தொண்டினுக்கே என்ன-கைம் மாறுசெய்வேன் ?

..

என்தலையைத் தாழ்த்திநின்றே எம்மானே! உனைவணங்கி

இன்புறுவேன்! ‘சிரஞ்சீவி ‘ எனும் ‘பட்டம் ‘ நீபெறுக! ‘-

..

எனக்குனிந்தே சொன்னாளே! ‘பாற்கடலில் ‘ எழுந்தமலை

இனிமையுறக் குனிந்ததென்றால் ‘இலக்கியமே ‘ நிமிர்ந்ததன்றோ ?

..

உடலில்லாக் காற்றுக்கே உயர்ந்தமரம் ஒடிந்துவிடும்!

உடல்மறையும் மின்னலுக்கே ஒருதூணும் பொடிந்துவிடும்!

..

நிமிர்ந்ததெல்லாம் என்றும் நிமிர்ந்தே நிற்பதில்லை!

திமிர்ந்த புயலுக்கும் தேரைகள் சிரித்துநிற்கும்!

..

நாணல் குனிவதனால் வெள்ளத்தால் நலிவதில்லை!

வீணனுக்கும் ‘திமிர்ச்-சிரிப்பு ‘ வீழ்ச்சிக்குப் பாய்விரிப்பு!

.

பாரதத்தின் கெளரவர்கள் ‘நிமிர்ந்தமலைக்(கு) ‘ உதாரணங்கள்!

சீரதிகம் பெறும் ‘விதுர ‘-மாமலையோ, குனிந்தமலை!

..

இல்லையெனில், கண்ணனென்னும் இளகிய ‘தெய்வமலை ‘,

இல்லத்தில் குனிந்துசென்று விதுரனிடம் இன்னுரைகள்

..

பலஆற்றி, உணவருந்திப், பரிசுபல செய்வானா ?

நிலைஉணராக் கெளரவர்க்கும் நிமிர்ந்த ‘பலன் ‘ சொல்வானா ?

..

குனியாத அரசனெல்லாம் முனிவர்முன் குனியலையா ?

குனியமறுத் தவேந்தர்கள் குலமெல்லாம் அழியலையா ?

..

இன்றும்தான் பார்க்கலையா ?! எத்தனை அசுரர்கள்

என்கண்முன் தெரிகின்றார்! இளம்வயதில் இவரெல்லாம்

..

ரொட்டிக்கும் கையேந்தி ரோட்டோரம் நின்றவர்கள்

வெட்டிப்பேச் சால்பதவி விரைவாகப் பெற்றவுடன்,

..

இவர்துண்டும் நிமிர்கிறது; இவர்தலையும் நிமிர்கிறது!

அவர்விதியின் நாயகனோ அதோ ‘குனிந்து ‘ சிரிக்கின்றான்!

..

தலைகுனிந்தே ‘கணினியில் ‘ தவறின்றி அடிக்கின்றேன்!;

மலைகுனிந்தால் வாழ்வுவரும்; குனிந்தால்தான் வரும் ‘தெய்வம் ‘ ‘!

**************************
kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்