கவிதைகள்
மாலதி
சுக்கல் சுக்கலாய் என் சிதிலங்கள்
என் பெயரால்.
தீவிரவாதம் என் உணர்வில்.
ஒளிந்து வாழ விதியும்
பேரொளி எழுப்ப மனமும்
ஒன்றோடொன்று போராடி
எப்போதைக்கும்.
வெடிமருந்துகளை கிட்டிக்கிறேன்
அழுந்த அழுந்த கிட்டங்கியில்.
வாழ்நாளில் வெடிக்கவிட
மாட்டேன்.
தற்கொலைப்படையாகவும்
மாட்டேன்.
நட்பில்லாத பெருங்காட்டில்
புதைத்துப் போகிறேன்
இருட்டுகளுக்காகும்
வெளிச்சத்தை
உங்கள் யாருக்கும் நான்
சொந்தமில்லை
துறந்து விடுங்களென்னை
ஈரமின்றி.
கொள்ளை போனவீட்டுச்சொந்தக்காரன்
போலீசுக்கு
ஒப்புவிக்கும் பட்டியல்
எலும்புகளைச் சேகரிக்க மயானத்தில்
உட்கார்ந்த மகன்
காணாமல் போன மகளின்புத்தகக்கட்டில்
தடயம் தேடுகிறபெற்றோர்
தவறின காதலின் ஈமெயில் ஐடியை
வெறிக்கும் தருணங்கள்
போல்கின்றேன்
முதல் சுற்றில் வேகாத கவிதைகளை
இரண்டாம் கட்டத்துக்குத் தேற்றும்
அவசியங்களில்.
இரவுப்படுக்கையில்
என்னைப்புரட்டிப்போடுகின்ற
துக்கங்கள்
அநேக முதல் நாட்களாலானவை.
அழிந்த ஆதிகள்.
கிழிபட்டுக்குதறப்
பட்ட முடிவுகளை
ஆரம்பத்திலேயே
வைத்திருந்தவை.
புரளும்போதெல்லாம்
ஒரு கனவைத் தேடுவேன்
கண்மூடி.
குளிர்மடி கிடைக்கும் வரை
விரல் குவிந்து
மயானத்தைச்
சூட்டும்வரை.
கடைசிக்கான ஆயத்தங்களின்
நபரோடு.
___
malti74@yahoo.com
- உயிர்மை நவம்பர் 2003 இதழிலிருந்து
- குலேபகாவலி Vs மிராண்டா
- பெண்ணில்லா உலகம்.
- உயிர்ப்பலியும் பெரியாரும்
- கடிதங்கள்( தமிழ்) – நவம்பர் 6, 2003
- ஆதம்பூர்க்காரர்கள்
- அவரோகணம்
- உறவு
- ரமணன், NRI
- சைக்கிள்
- தெளிவு
- குழந்தை
- விடியும்! – (21)
- அமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்
- சூஸ்பொரி – கல்லூரிக் காலம் – 6
- சூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்
- அணுத்திமிரும், ‘அணுஜனநாயகமும் ‘
- நமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா ?
- தயிர் சாதம்
- கவிதைகள்
- அத்தை மகள்!
- நீயும்–நானும்
- தீபங்கள்
- சொல்லாத ஒரு சொல்
- 3 கவிதைகள்
- காய்ந்து கொண்டிருக்கும் நதியின் துயரை:கூட்டுக்கவிதை
- தெரிந்துகொள்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -4
- மூடநம்பிக்கைக்கு அறிவியலைப் பலியிட்ட பல்கலைக்கழகங்கள்
- அமெரிக்க அணுத்துறைத் தணிப்பு முறைகள் இந்தியாவுக்கு ஒத்தவையா ? பாரதம் வாழைப்பழக் குடியரசா ? அல்லது பலாப்பழக் குடியரசா ?
- புகாரி நூல் வெளியீடு
- ஒரு நாள் மட்டும்……..
- சாரு நிவேதிதாவின் கோணல்கள் – நாடோடிப் பக்கம்
- பாராட்டியே தீரவேண்டும் பாலாவை
- Mr. & Mrs. Iyer
- தீக்கதிர் தோழர்களின் தீபா ‘வலி ‘
- கண்ணப்ப தம்பிரான் – அஞ்சலி
- கலைஞர்-ஜெயமோகன்
- எனக்குப் பிடித்த கதைகள் – 84 – மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் ‘மாடும் மனிதனும் ‘
- வட இந்திய கார கத்திரிக்காய் கறி
- வடஇந்திய மோர்க்கறி அல்லது மோர்க்குழம்பு (தஹி கி கறி)
- ரவி ஸ்ரீநிவாசுக்கு பதில்
- பல கோடி பிரபஞ்சங்களா ? அல்லது நமது பிரபஞ்சத்தின் அதிர்ஷ்டம் தானா ?
- திறந்த விழிகள்:கட்டுக்கோப்பான படைப்புமுறை நோக்கி: ஆர். ஆர். சீனிவாசனின் விவரணப்படங்கள்
- சொந்த மொழி
- விஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா ?
- தமிழ் சினிமாவின் பிதாமகன் (கள் ) – யார்… ?
- முனி.
- இறைவா நீ என்ன சாதி ?
- நிறமற்ற ஒரு சுவர்
- கவிதைகள் சில
- ஒரு வரவுக்காய்..
- கடிதங்கள் (ஆங்கிலம்) – நவம்பர் , 6, 2003
- திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 2
- குறிப்புகள் சில-நவம்பர் 6 2003
- இஸ்லாத்தில் பிரிவினை
- நந்தவனத்தில் ஓர் ஆண்டி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்று