பரு

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

வேதா மஹாலக்ஷ்மி


காயும், காயும் என்றெதிர்பார்த்து
முற்றிப் போய்
பழுக்கவும் அனுமதித்து,
தழும்பாகிடாது
சீக்கிரமே கிள்ளி எறிய நினைத்து,
வலுவில வலியை மறந்திருந்தாலும்…..

எதேச்சையாய் விசிறியடிக்கும்
நீரலையில் நினைவலையில்,
முனை கொஞ்சம் அசைந்து
வேர் வரை வலிக்கிறது….

பருவைப் போல , உன் பேச்சும்!!!

veda
piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலக்ஷ்மி

வேதா மஹாலக்ஷ்மி