மனசெல்லாம் நிம்மதி

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

சத்தி சக்திதாசன்


வெண்முகில் மலையோடு கொண்ட உறவால்
உதித்த வெண்பளிங்குகளாம் வான்
மழை மண்ணோடு பேசிய கதையால் தவழ்ந்த
மண்வாடை சிந்தையைத் தாலாட்டிற்று

தென்றலின் தழுவல் மலரோடு உறவாடி
காதலித்த கதைகளில் பிறந்த இன்பத்தினால்
புதிதான நறுமணம் சுகந்தமான அலையாக
பொன்வதனத்தைக் குளிப்பாட்டிற்று

வான்மதி வீசும் அந்த பொன்னோளி
வழிகாட்டும் முடிவற்ற இரவினிலே அங்கு
கூடுகட்டி வாழும் பறவைகள் ஒன்றாக
நிலவொளியில் குலவி மகிழ்ந்திற்று

இயற்கை போட்டதொரு இனிய வேலியாம்
பச்சை மரங்களின் அணிவகுப்பு என்றுமே
உள்ளங்களை கொள்ளை கொண்டு பூமியில்
மனசெல்லாம் நிம்மதியை நிரப்பிற்று

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்