அகதி

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

இளந்திரையன்


காலம் நகர்வது
தெரியாமலே
கரைந்து போகிறது

உணர்வுகளால்
உறக்கம் தொலைந்து
போகிறது

அலைந்து அலைந்து
அதுவே
வாழ்வாகிப் போகிறது

உலகின்
கருணை என்
உள்ளம் அறியவில்லை

அதுவே விதியாகி
அலைவது வாழ்வாகி
இன்னும் நான்

உலகின் வீதிகளில்
அலையும் அகதியாய்
கருணை வேண்டி

காலம் நகர்வது
தெரியாமலே
கரைந்து போகிறது

Ssathya06@aol.com

Series Navigation

இளந்திரையன்

இளந்திரையன்