நெஞ்சுக்குத் தெரியும்

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

சத்தி சக்திதாசன்


நெஞ்சுக்குத் தெரியும்
நேற்றைய வாழ்வில் தோன்றிய புயல்
நடந்த பாதையில் குத்திய முற்கள்
நெஞ்சுக்குத் தெரியும்
அன்பைக் கொடுத்து துன்பம் வாங்கி
அழுத காலத்தின் கோலங்கள் எல்லாம்
நெஞ்சுக்குத் தெரியும்
கையில் காலணா காசுமின்றி பசிபோக்க வழியின்றி
ஒரு குவளைத் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்த கதை
நெஞ்சுக்குத் தெரியும்
மற்றவர் துயரம் கண்டு மனம் வெதும்பி
வேதனையால் வெதும்பிய நாட்கள்
நெஞ்சுக்குத் தெரியும்
பிறர் வாழ்வினிலே வரும் சிறு உயர்வைக் கண்டு
உள்ளம் உவகை கொண்டு மகிழ்ந்த நாட்கள்
நெஞ்சுக்குத் தெரியும்
இந்த நெஞ்சுக்குத் தெரிந்த உண்மைகள் எல்லாம்
உதறித் தள்ளி விட்டு இன்றைய வாழ்வில் பொறாமை கொண்டு
உறவுகள் செய்யும் பொல்லாப்பும்,போலி வேஷங்களும் கூட
நெஞ்சுக்குத் தெரியும்.

சத்தி சக்திதாசன்

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்