சுதந்திர தினம்.

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.


பாரதம் பார்த்த ரத்தம்
தியாகிகள் பட்ட கஷ்டம்
காந்தியம் செய்த யுத்தம்
கடைசியில் வெற்றி பெற்றோம்.

ஊனமாய் இருந்த நாடு
ஊமையாய் வாழ்ந்த மக்கள்
கல்லாக இருந்த கடவுள்
கடையில் வெற்றியின் வடிவில்.

வெள்ளையன் விளையாடிப் பார்த்தான் -பின்
விளைவு தெரியாது சிரித்தான் – நம்
வீரம் தெரிந்தபின் வேர்த்தான்
வெட்க்கமில்லாமல் தோன்றான்.

என் தாய்த்திருநாடே உனக்கு என் வணக்கம்
நீ கொடுத்தது இந்த நல்லுறக்கம்
மறவேன் என் உயிர் உள்ளவரைக்கும்
உயிர் போனாலும் இம்மண்ணிலேதான் அடக்கம்.

பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை.
balageethan@rediffmail.com

Series Navigation

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.