முகவரி மறந்தேன்…
மோகனா.
சித்திரை வெயிலிலும்
சரசரக்கும் பட்டுப் புடவை.
கழுத்தே அறுந்து விடுமோ என்ற பயத்திலும்,
பதறாமல் எட்டு பவுன் சங்கலி.
காதிலும், கையிலும்
இன்னும் இடுக்குகளிலும்
நீ
வாங்கி தந்த தங்கத்தை
தவறாமல் அணிந்து கொள்கிறேன்.
என் உதிரத்தில் குளித்து
என்னுள் வளர்ந்தவனாகிலும்,
உன்னையே உருவாக கொண்டு
பிறந்த உன் மகனையும்
கையில் பிடித்துக் கொள்கிறேன்.
புன்னகைப் பூக்களை
மறக்காமல் சூடி கொள்கிறேன்.
வாழ வந்த இடத்தில் என்னை
இட வலம் பெயர்த்த
உன் உற்றாரிடமும், மற்றொரிடமும்,
உன் அந்தஸ்தை
பிரதிபலிக்கும் கண்ணாடியாக,
உன் வெற்றிகளை
பரை சாற்றும் முரசாக,
உன் உறவுகள் உடையாமல்
காக்கும் பரிசலாக,
என் சுய முகவரி மறந்தவளாக
வலம் வருகிறேன் ஒவ்வொரு விழாக்களிலும் !
*********
மோகனா.
MohanaLakshmi.T@in.efunds.com
- உலக நடை மாறும்
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- விடியும்! நாவல – (4)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- பணமே உன் விலை என்ன ?
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- மூன்று கவிதைகள்
- முகவரி மறந்தேன்…
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- நேற்றான நீ
- சொல் தேடி பயணம்…
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- சீதாயணம்!
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3