சீதாயணம்!
சி. ஜெயபாரதன், கனடா
இராவணன்
ஜானகி தேவி
கானக வாசி!
நாட்டில் பூத்த ரோஜா மலர்!
மாற்றான் தோட்டத்து மாங்கனி!
ஆயினும் அவளது
மேனி எழிலில்
ஞானம் இழந்து
மாறு வேடத்தில்
கள்ளத்தனமாய்க் கடத்தி
இலங்கா புரியில்,
அரண்மனையில்
அலங்காரச் சிறையில்,
அடைத்து வைத்து,
அடிக்கடி
அழகு பார்த்து,
பூஜை செய்த
போக்கிரி ராஜா!
இராமன்
வான வில்லை
வளைத்துப் போட்டு
வெற்றி வீரனாய்
மாலை இட்ட மங்கை!
மானசீக மனைவி!
ஜானகி தேவி!
கூனிக் கிழவி
ஞானச் சூழ்ச்சியால்
ஈரேழு ஆண்டுகள்
நாரதர் உருவில்
வனவாசம் புகுந்து,
மானைப் பிடிக்கப்போய்
மனைவியைப் பறி கொடுத்தவன்!
இறுதியில்
படை திரட்டிப் போரிட்டு
பலர் உயிரிழந்து
அனுமானைத் தூதுவிட்டு
ஈழத்தில் தீயிட்டு
தேவியை மீட்டு
அயோத்திய புரிக்கு
பட்டத் தரசனாய் மீண்டவன்!
பாரத நாரீமணியை
தீக்குளிக்க
வைத்த பின்னும்
ஐயம் தீராமல்,
அறிவு கெட்ட
வண்ணான் சொற்கேட்டு,
தர்ம பத்தினி
கர்ப்பிணி,
கதறக் கதற மீண்டும்,
கானகம் துரத்திய
ஞானப் பதி!
தன்
மானம் காத்து
மனைவி மானத்தைக் கப்பலேற்றிய
செங்கோல் ராஜா!
************
- உலக நடை மாறும்
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- விடியும்! நாவல – (4)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- பணமே உன் விலை என்ன ?
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- மூன்று கவிதைகள்
- முகவரி மறந்தேன்…
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- நேற்றான நீ
- சொல் தேடி பயணம்…
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- சீதாயணம்!
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3