இரண்டு கவிதைகள்
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.
கிராமத்து காதல்…
களத்து மேட்டினிலே
கயசைத்து போனவளே…
குறுக்கு சிரித்தவளே
கொஞ்ச நேரம் பாரடியோ…
அரைத்து வச்ச மஞ்ச பூசி
அய்த்தனையும் சேத்து பூசி
அரைநொடி நீ ஊறுப்புள்ள
அப்புறமா பாருபுள்ள…
தெக்கே காத்தடிக்கும்
தெருவெல்லாம் ஊத்தடிக்கும்
நிக்காம ஓடி வாடி…
புடிக்கிறேன் உடும்பு புடி…
பாத்துபுட்டேன் மேடுபள்ளம்
தாவட்டுமா லாவகமா…
மாட்டிகிடேன் நான் வசமா
மச்சான விட்டுடுமா…
ஆச வச்சன் உன் மேலே
பூச எப்போ வச்சுக்கலாம்…
தேதி பாத்து நீ சொன்ன
மீதி கூத்த கத்துக்கலாம்…
அட..போ மச்சானே
ஆகட்டும் பாத்துகலாம்
அரைச்சு விட்ட மீன் கொழம்பு
அள்ளி அள்ளி திண்ணுக்கலாம்…
நீயே கதியனக்கு…
என்
இதயத்தில் பூகம்பம்
எதனால் பெண்ணே ?
இடிந்தது உள்ளம்
உன்னால் தானே!
ஏக்கம் நிறைந்த கண்ணில்
தூக்கம் பறித்தவள் நீ…
சோகம் வளர்ந்தது என்னில்
சுகமாய் ரசித்தவள் நீ…
ஏனடி என்னை பார்த்தாய்
எதுவுமே பிடிப்படவில்லை…
பாரடி இதயம் இன்று
பாவம் துடிக்கவேயில்லை…
உன்னை நினைக்கும் போது
உலகம் கூட கடுகு…
உள்ளம் கொடுத்த பின்பு
உண்மையாய் என்னுடன் பழகு…
ஆயிரம் முறை நான் அழுதேன்
ஆயினும் உன்னையே தொழுதேன் – உன்
உள்ளத்தை நானே உழுதேன்
காதலை அதனில் விதைத்தேன்.
பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை
balageethan@rediffmail.com
- விக்கிரமாதித்யன் கவிதைகள்
- விலங்குகளின் வாழ்வும் விளங்கும் உண்மைகளும் (வாழும் சுவடுகள் – கால்நடை வைத்தியரின் அனுபவங்கள் – நூல் அறிமுகம்)
- கடிதங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதிமூன்று
- விடியும்! (நாவல் – 3)
- தீராநதி
- மரபணு
- மனிதர்கள்
- இராமன் அவதரித்த நாட்டில் …
- பாருக்குட்டி
- நகர்நடுவே நடுக்காடு [அ.கா.பெருமாள் எழுதிய ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் :நாட்டார் தெய்வங்களும் கதைப்பாடல்களும் ‘ என்ற நூலின் ம
- தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்
- மூன்று கவிதைகள்
- இரண்டு கவிதைகள்
- மணி
- சிறையா, தண்டனையா ? ?
- ‘ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ‘ ஒரு சிறுகதையும், அது குறித்த புரிதலுக்காக குறிப்புகளும்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 9
- கண்காட்சி
- எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- குறிப்புகள் சில-ஜீலை 3 2003 (நதிகள் இணைப்புத் திட்டம்-உயிரியல் தொழில்நுட்பமும்,வேளாண்மையும்,எதிர்ப்பும்-செம்மொழி-அறிவின் எல்லைகள
- பேய்களின் கூத்து
- தமிழா எழுந்துவா!
- பொருந்தாக் காமம்
- தண்ணீர்
- உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 67)
- நமது வசையிலக்கிய மரபு
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-1
- சுஜாதா – எனது பார்வையில்
- ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்.
- ஏறத்தாழ சூரியக் கிரகக்குடும்பத்தைப் போன்றே இருக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
- அறிவியல் மேதைகள் ஜான் லோகி பெரெட் (John Logi Baird)
- இரண்டு கவிதைகள்
- வாரபலன் ஜூன் 24, 2003 (குயில்கள், கவிதைகள், குறுந்தொகைகள்)
- மனுஷ்யபுத்திரன்களும் மண்குதிரைகளும்.
- கூட்டுக்கவிதைகள் இரண்டு
- அன்புள்ள மகனுக்கு ….. அம்மா
- பார்க் ‘கலாம் ‘
- உலகத்தின் மாற்றம்
- கணையும் கானமும்
- நான்கு கவிதைகள்
- பிரம்மனிடம் கேட்ட வரம்!
- கவி
- தீத்துளி
- சீச் சீ இந்தப் பழம் புளிக்கும்