நானே நானா

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

சத்தி சக்திதாசன்


தப்புத் தாளங்களை வாழ்க்கை முழுவதும்
தட்டி வந்து விட்டேன் ஏனோ
சரியான ராகம் செவிகளுக்குள்
சங்கமவாவதில்லை
தொட்டுப் பார்த்தும் கூட ஏனோ
முள்ளின் கூர்மை உணர்வுக்கு எட்டவில்லை
திரும்ப திரும்ப தீக்குள்ளே விரலை
திணிக்கின்றேன்
சாப்பிட்டுப் பார்த்து எத்தனை முறை
தூக்கி எறிந்தவற்றை
மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசைப்படுகின்றேன்
கோவில்கள் ஆயிரம் ஏறி விட்டேன் இன்னும்
கொள்கையிலே விளக்கமில்லை
ஓ!
என் இதயத்தைச் சுற்றியுள்ளை நான்
எனும் உறையைக் கழற்ற மறந்ததுதான்
மயக்கத்தின் காரணமோ ?

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்