யாதுமாகி …

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

சுந்தர் பசுபதி


தவறவிட்ட தருணங்கள்
தழும்பாகி
சொரிந்துகொள்ள
உணக்கையான
காயமாகி
உள்ளுக்குள் அடிபட்ட
ஊனமாகி
அவசியத்தை
வலிக்குள் பொதித்த
நிகழ்கால தேடலின்
மையமாகி…….

டாஹோ
மலைத்தொடரில்
க்ராண்ட் கான்யான்
பள்ளத்தாக்கில்
கோல்டன் கேட்
பாலத்தில்
நயாகரா
நீர்வீழ்ச்சியில்
எங்கேயோ கூடப்படித்த
கருணாநிதியும்
அகஸ்மாத்தாய் சந்தித்த
ஆராவமுதனும்
அப்பாவின் பால்ய
நண்பரும்
சிங்கப்பூர் செல்வசேகரனும்
தட்டுப்பட

எங்கே நீ…. ? ? ?

Series Navigation

சுந்தர் பசுபதி

சுந்தர் பசுபதி