நா.கண்ணன்
பரந்து கிடப்பதால்
பல வழிகள்.
பாதைகள் பிரிவது
இயற்கை.
முடிவற்றவைப்
போல் தோன்றும்
பாதைகளும்
முடிகின்றன.
சிலவை
அல்பமாய்
சிலவை
நீண்ட நெடிய
பயணத்திற்குப் பின்.
சில பாதைகள்
விட்ட இடத்திலிருந்தே
தொடங்குகின்றன.
அன்று
செதுக்கிய
மரச் சிற்பம்
காற்று
மழை
கதிர்
பட்டு
கரைந்து
போயிருந்தது.
என்
உலகமென்றில்லை
உன்
உலகிலும்
கரைந்து போன
கனவுகளுடன்
மல்லுக்கட்டக்கூடாது.
விட்ட இடத்திலே
எதுவுமே இருப்பதில்லை
நகர்ந்து கொண்டிருக்கும்
உலகில்
உலகிற்கு
நன்றியுடன்
வந்தனம் சொல்லிப்
பழகவேண்டும்.
மேலும் இழப்பதற்கு
இல்லை என்பது
சுதந்திரம் என்றால்
நீ கேட்கவா போகிறாய்.
அன்று
தெளிந்த
நாளாக
பரந்து கிடந்தது.
எல்லாம்
எல்லோரும்
பார்வைப் பரப்பில்
சம ஆகுரிதியுடன்.
விடை பெறுவது
கடினம்தான்.
விட்ட குறைகள்
முடிக்காத வேலைகள்
நின்ற துயரம்
கடைசியாய்
குழந்தைக்கு
பால் கரைத்து விட்டுப்
போயிருக்கலாம்தான்.
ஆனாலும்
ஆற்றொழுக்கின்
அமைதிக்கு
பங்கமில்லாமல்
போபவை
போகட்டும்
என்று விட்டு
விலகி நிற்கப்
பழக…….
nkannan@freenet.de
- சென்னைத்தமிழில் கணினி
- பேராசை
- அறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்
- பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)
- சாக்கியார் முதல் சக்கரியா வரை
- ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை
- பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு
- கவிதை பற்றி
- எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)
- காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு
- தூண்டில்காரர்கள்
- தின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்
- தினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்
- ப சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசுகிறார்
- பசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2
- இயந்திரப் பயணங்கள்
- அன்னை
- இனியொரு வசந்தம்!!
- காலம்
- உயிரின் சொற்கள்
- அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)
- எங்கே அவள்
- கடிதங்கள்
- குழியும் பறித்ததாம்!
- எதிர்காலத்தில் ஒரு நாள்………….
- ஓ போடு……………
- அம்மாச்சி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து
- 5140
- இந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)
- இரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்
- ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்
- முதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி
- பசுமையாகும் மார்க்சியமும்,புதிய பார்வைகளும்
- வரங்கள் வீணாவதில்லை…
- தாயின் தனிச்சிறப்பு
- கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்
- ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?
- கவித்துளிகள்(ஹைக்கூ)
- இரண்டு கவிதைகள்
- மறுபிறவி எடுத்தால்
- சாப்பாடு
- அன்னையர் தின வாழ்த்து
- பிரியும் பாதையும் பிரியா மனமும்
- மாப்பிள்ளைத் தோழன்