வஞ்சம்

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

பசுபதி


கண்ணிழந்த வெஞ்சினத்தார் கண்பறிக்க முற்பட்டால்
மண்ணில் குருடரன்றோ வாழ்ந்திடுவர் ? — விண்டறிவாய்
பாமரனே! வஞ்சப் பயணம் தொடங்குமுன்னே
ஈமத் தழல்இரண்(டு) ஏற்று.

சின்ன நியாயமெனும் தென்றலாய்த் தோன்றிடும்;
பின்னர் பெருந்தவறாய்ப் பேய்ச்சூறைக் காற்றாகும்.
நெஞ்சகத்தில் உட்புகுந்து துஞ்சுநற்கு ணத்தைவிஞ்சும்
வஞ்சமென்னும் நஞ்சையுண்ண அஞ்சு.

~*~o0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி