மண்

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

புஷ்பா கிறிஸ்ரி


தாயே நீ

சிரிக்கிறாய்.

மிதித்து மிதித்து

யார் உன்னை

அணைத்தார்கள் ?

ஒட்டிக் கொண்ட உன்னைத்

தட்டிக் கொண்டு எழுகிறேன்

மீண்டும் ஒருமுறை உன்னைத்

தொட்டுக் கொள்கிறேன்

என்றாலும், மிதிக்கிறேன்.

தாயே என்னை

மன்னிக்கும் சக்தி

இம்மண்ணில் உனக்குத்

தான் அதிகம் உள்ளது

எத்தனை தடவைகள் மிதிக்கிறேன்

மகிழ்ச்சியுடன் தானே மன்னிக்கிறாய்

மனிதர்கள் மட்டுமா ?

பறவைகள், மிருகங்கள்,

நீர், வானம், காற்று,, ஒளியென்று

அனைத்தின் மிதியலிலும்,

மெளனமாய் ஒரு புன்னகை…

புன்னகைக்க எப்படி

உன்னால் முடிகிறது ?

நீ மண் என்பதனால்

மனிதனின் நேசத்தை

நீ மதிப்பதனால்

மாண்புமிகு தேசத்தை தந்த

தாயாய் நீ

என்றும் எம் நினைவில்

நீங்காமல் நிற்பாய்.

***
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி