உழவன்
தேன்சிட்டு.
காய்ப்படைந்த கைகள்,
வெயிலால் சுடப்பட்டு
கருமை ஏறிய தேகம்,
மண்ணோடு பழகிப் போன பாதம்,
குழிந்த வயிறு,
கூடு கட்டிய நெஞ்செலும்பு,
வானம் பார்த்தே தேய்ந்த இமை,
யார் அது ? ஓரமாய்..
உதிர்ந்து விட்ட ஒரு துளியாய்..
நடு நிசி நேரத்தின்
விசும்பல் சத்தங்கள்
அறுந்து போன இழையாய் …
பொலிவிழந்த ஓவியம் இன்று,
பொடிப் பொடியாய்
நொறுங்கியது இங்கே …
கண்ணீர் பொய்த்தாலும்,
உள்ளுக்குள் ஓடியாடும்
உதிரம் சிந்தி,
வளர்த்த பயிரெல்லாம் வாடியதே ..
வானமும் தந்திடுமா கண்ணீரை ?
மண் வாசமாம், நம் சுவாசத்தின்
தலைப் பாகையில் தங்க கிரீடமாம்
தமிழுக்கே, தனிச் சிம்மாசனமாம்
தேர்தல் களத்தில் மட்டும்
வானைத் தொடும் வாக்குறுதிகள்
வண்ண வண்ணமாய் !!
முப்போகம் விளைந்திடுமா ?
முரசு கொட்டும் நாள் வருமா ?
கல்லறையிலேனும்
‘கழனி செய்யுங்கள் ‘
உதிரும் உழவனின் ஓலக் குரலே
ஓங்கி ஒலிக்கிறது எங்கெங்கும்….
காளை பூட்டிய கட்டை
வண்டிகள் குலுங்கி நடக்க,
நாட்டுப் பாடல்கள்
நான்கு திசையும் ஒலித்து சிரிக்க,
உதவியென்னும் ஒளிக் கரத்தால்
வளைந்து போன முதுகினை
வாளாக்கும் நாள் வருமா ?
thenchittu@yahoo.com
- சின்னச்சாமியைத் தேடி
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 11 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- இந்தவாரம் இப்படி பெப்ரவரி 16 (காதலர் தினம், உலகமயமாகும் அரசியல் )
- கடிதங்கள்
- இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.
- நினைத்தேன். சொல்கிறேன்… விபச்சார கைதுகள் பற்றி
- உலக வங்கி சிபாரிசு : சீனாவிற்கு மாட்டுக் கறி
- ஆண் என்ற காட்டுமிராண்டி – இறுதிப்பகுதி
- முடிவின்மையின் விளிம்பில்
- இனிய காதலர்தின வாழ்த்துக்கள்!
- இசைக்கலைஞர்களை ஒழிக்க பாகிஸ்தான் முயற்சி
- உழவன்
- அழிநாடு
- ‘அதற்குப் பிறகு! ‘
- என்னவளே
- பிள்ளைப்பேறு
- வாயு (குறுநாவல் ) 1
- வறுமையே! வறுமையே!
- உன் பார்வைகள்.
- ரஷீத் மாலிக் எழுதிய குவாதீம் ஹிந்துஸ்தான் கி டாரீக் கே சந்த் கோஷே – புத்தக அறிமுகம்
- ஆண் என்ற காட்டுமிராண்டி – இறுதிப்பகுதி
- அறிவியல் துளிகள்-14
- பசிபிக் கடல் தீவுகளில் செய்த பயங்கர அணு ஆயுதச் சோதனைகள்!
- புரியாத முரண் ( குலாப்தாஸ் ப்ரோக்கரின் வண்டிக்காரன் – எனக்குப்பிடித்த கதைகள் -48)
- முடிவின்மையின் விளிம்பில்
- ஆங்கிலத்தில் நாம் எதை எழுதவேண்டும் ?
- ஐரோப்பிய குறும்பட விழா .2003
- ராமன் தவறிவிட்டான்
- வாயில் விளக்குகள்
- மீட்டாத வீணை
- மெளனமே பாடலாய் ….
- என்றாவது வருவாள்
- ‘கொண்டாடு – இல்லாவிட்டால் … ‘ – உரைவெண்பா
- எங்குரைப்பேன் நன்றி
- இவர்களுக்காக…..